மேலும் அறிய

Crime: காதலித்ததால் ஆத்திரம்.. 16 வயது மகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் 16 வயதான மகள் பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற அம்மாணவி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி பல்வேறு இடங்களில் மகளை தேடினர். இதற்கிடையில் பட்வாரப்பள்ளி கிராமம் அருகே உள்ள ஏரிப்பகுதியில் அம்மாணவி உயிரிழந்த நிலையில் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தினர். 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, ‘உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இந்த குற்றச் சம்பவம் பெற்றோர்களால் செய்யப்பட்டுள்ளது. மாணவியும் முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அம்மாணவி காதலை கைவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகிய  இருவரும் தங்கள் மகள் என்று கூட பாராமல் அம்மாணவியை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக நாடகமாடினர்’ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget