மேலும் அறிய

Crime: காதலித்ததால் ஆத்திரம்.. 16 வயது மகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் 16 வயதான மகள் பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற அம்மாணவி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி பல்வேறு இடங்களில் மகளை தேடினர். இதற்கிடையில் பட்வாரப்பள்ளி கிராமம் அருகே உள்ள ஏரிப்பகுதியில் அம்மாணவி உயிரிழந்த நிலையில் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தினர். 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, ‘உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இந்த குற்றச் சம்பவம் பெற்றோர்களால் செய்யப்பட்டுள்ளது. மாணவியும் முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அம்மாணவி காதலை கைவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகிய  இருவரும் தங்கள் மகள் என்று கூட பாராமல் அம்மாணவியை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக நாடகமாடினர்’ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget