மேலும் அறிய

Crime: காதலித்ததால் ஆத்திரம்.. 16 வயது மகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் 16 வயதான மகள் பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற அம்மாணவி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி பல்வேறு இடங்களில் மகளை தேடினர். இதற்கிடையில் பட்வாரப்பள்ளி கிராமம் அருகே உள்ள ஏரிப்பகுதியில் அம்மாணவி உயிரிழந்த நிலையில் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தினர். 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, ‘உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இந்த குற்றச் சம்பவம் பெற்றோர்களால் செய்யப்பட்டுள்ளது. மாணவியும் முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அம்மாணவி காதலை கைவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகிய  இருவரும் தங்கள் மகள் என்று கூட பாராமல் அம்மாணவியை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக நாடகமாடினர்’ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget