மேலும் அறிய

சென்னை முதல் ஐசிசி வரை.. தன் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ள இந்திரா நூயி!

2006ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற இந்திரா நூயி, தனது வாழ்க்கை வரலாற்றை My Life in Full என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

ஆண்களோடு கல்வி கற்று, ஆண்களால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தகத் துறையில் சர்வதேச அளவில் கால்தடம் பதித்த சென்னையின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையாகத் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளார் இந்திரா நூயி. 2006ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற அவர், தனது வாழ்க்கை வரலாற்றை My Life in Full என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். 313 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் அமெரிக்காவில் அவர் குடியேறும் போது நிகழ்ந்த அனுபவங்கள், வர்த்தகம் தொடர்பாக அறைகளுக்குள் நிகழ்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள், தனது பணியையும் குடும்ப வாழ்க்கையையும் சமமாக அவர் கருதியது, பெருந்தொற்று காலத்தில் பணியிடங்களில் நிகழும் மாற்றங்கள் முதலானவற்றை அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பேசியுள்ளார் இந்திரா நூயி. 

கடந்த 2019ஆம் ஆண்டு, பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார் இந்திரா நூயி. 65 வயதான அவர் பதவி விலகுவதற்கு முன், பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்தப் புத்தகத்தில் அவர் பெப்சி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, Boston Consulting Group (BCG), Motorola, ABB ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியது முதலானவற்றோடு, குழந்தைகள் நலன், தனது குழந்தையின் பள்ளியில் நேர்ந்த நிறவெறிக் கொடுமை, தனது தாயுடனான உறவு முதலான பெர்சனல் பக்கங்களையும் இதில் வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை முதல் ஐசிசி வரை.. தன் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ள இந்திரா நூயி!

2007ஆம் ஆண்டு, தனது தாய் குறித்து இந்திரா நூயி பேசியிருந்தது வைரலானது. அதில் அவர் முதன்முதலாகப் `பெப்சி’ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த தகவலைத் தனது தாயிடம் தெரிவித்த போது, அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு, அவரது தாய் அவரைப் பால் வாங்கச் செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்திருந்தார். அதனை எதிர்த்தபோது, இந்திரா நூயியின் தாய் அவரிடம் அவர் பெற்ற `கிரீடத்தை’ வீட்டிற்கு வெளியே போட்டுவிட்டு வருமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்தப் புத்தகத்தில் அவர் பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதி இந்தியாவில் இல்லாமல் இருப்பதும், அதனால் பெண்களின் பணி தடைப்படும் சூழலில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு நிறுவனங்களின் ஆதரவு ஏன் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு, அவர் பணியாற்றிய நிறுவனங்கள் அவருக்கு எப்படி ஆதரவு தந்து, அவரைக் கவனித்துக் கொண்டன என்பதையும் கூறியுள்ளார். பெப்சி நிறுவனத்தில் பெண்களே இல்லாத தலைமைப் பொறுப்பாளர்களின் அறைக்குள் தனது இருப்பை அவர் எப்படி நிலைநிறுத்தினார் என்பதையும், அவரது பணி எப்படி இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார் இந்திரா நூயி. 

சென்னை முதல் ஐசிசி வரை.. தன் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ள இந்திரா நூயி!

இந்தப் புத்தகத்தைக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எழுதி முடித்துள்ள இந்திரா நூயி பணி நேரங்களைப் பணியாளர்களின் தேவைக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம் என்பதை வலியுறுத்தி வருகிறார். இந்திரா நூயி தற்போது அமேசான் நிறுவனத்தின் தலைமை மன்றக்குழு உறுப்பினராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முதல் பெண் தலைமைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget