மேலும் அறிய

துவங்க உள்ள பருவமழை... செலுத்தப்படாத கோமாரி தடுப்பூசிகள்... உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை ..

" செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனடியாக கோமாரி தடுப்பூசி, செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது "

" செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனடியாக கோமாரி தடுப்பூசி, செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே தடுப்பூசியை போட்டு முடிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வரப்போர் கோரிக்கை வைத்துள்ளன
 
கால்நடைகள் நிறைந்த மாவட்டம்
 
செங்கல்பட்டு மாவட்டத்தில்,  2 லட்சத்து 60 ஆயிரத்து 256 கால்நடைகள் உள்ளன. எருமை மாடுகள்  22 ,232,  வெள்ள ஆடு எண்ணிக்கை,  1 லட்சத்து 38 ஆயிரத்து 410,  ஆடுகளின் எண்ணிக்கை  63 ஆயிரத்து 719  உள்ளதாக மாவட்ட கால்நடை துறை தகவல் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் போடவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.''
 
 
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
முக்கிய வாழ்வாதாரம்
 
செங்கல்பட்டு மாவட்டமானது  தொழில் துறையில் வளர்ச்சி அடைந்து வந்தாலும்,  விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மிகப் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட கால்நடை வளர்ப்பதை தங்களுடைய பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர்.  கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை,  உயர்த்தி வருகிறது எனவும் கூறலாம்.  அந்த அளவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் கால்நடைகளை சார்ந்து இருந்து வருகிறது.
 
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி
 
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு இரண்டு முறை  மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  செப்டம்பர் மாதத்தில்  செலுத்தும் கோமாரி நோய் தடுப்பூசி ஆனது  பருவமழையை கணக்கில் கொண்டு செலுத்தப்படுகிறது.

மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
உயிர் இழக்கும் அபாயம்
 
கோமாரி நோய் என்பது கால்களில்  வரக்கூடிய மோசமான நோய் இதன் காரணமாக மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.   தொற்று நோயாகும் இருப்பதால்,  அதை  தடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நோய் அதிக அளவு பரவும் என்பதால் அதற்காக செப்டம்பர் மாதங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.  நோய் தொற்று உருவாகும் நேரத்தில் 21 நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கால்நடைகள் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் நடப்பாண்டு, இது குறித்து இதுவரை எந்த தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் , உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
விவசாயிகள் கோரிக்கை
 
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாய சங்க நலச் தலைவர் வெங்கடேசன்  தெரிவித்ததாவது : கடந்த சில ஆண்டு காலமாகவே தடுப்பூசி போடுவது தாமதமாகி கொண்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடைகளை கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
 
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
 
 இதுகுறித்து கால்நடை துறை இணை இயக்குனர்  தெரிவித்ததாவது : தற்சமயம் தோல் நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது விரைவில் கோமாரி நோய் தடுப்பூசியும் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Venkatesh Bhat: 24 வருஷமா இருந்த விஜய் டிவியை விட்டு விலக நன்றிக்கடன்தான் காரணம்: உண்மையை உடைத்த செஃப் வெங்கடேஷ் பட்
Venkatesh Bhat: 24 வருஷமா இருந்த விஜய் டிவியை விட்டு விலக நன்றிக்கடன்தான் காரணம்: உண்மையை உடைத்த செஃப் வெங்கடேஷ் பட்
Rasipalan: இன்று வைகாசி முதல் நாள்! எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று வைகாசி முதல் நாள்! எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
7 AM Headlines: பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்.. இன்று பிளஸ் -1 ரிசல்ட்.. இன்றைய ஹெட்லைன்ஸ் இதோ!
7 AM Headlines: பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்.. இன்று பிளஸ் -1 ரிசல்ட்.. இன்றைய ஹெட்லைன்ஸ் இதோ!
Embed widget