மேலும் அறிய

Olympics 2024: ஒலிம்பிக் கொண்டாட்டம்! இந்தியாவிற்கு எந்த தேதியில் என்னென்ன போட்டிகள்? முழு டேட்டா உள்ளே

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு எந்தெந்த தேதிகளில் போட்டிகள்? எத்தனை பேர் போட்டியை தொடங்குகிறார்கள்? என்பதை விரிவாக காணலாம்.

உலகில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக். 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் திருவிழா பாரீஸ் நகரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஏற்கனவே பாரீஸ் நகரத்திற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ஒலிம்பிக் தொடரில் என்ன தேதிகளில் இந்திய வீரர்களுக்கு போட்டிகள்? எத்தனை வீரர்கள் பங்கேற்கின்றனர்? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

வில்வித்தை:

வில்வித்தை போட்டி நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் 6 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

தடகளம்:

இந்திய வீரர்களுக்கு பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ள தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. தடகளப் போட்டிகளில் மொத்தம் 29 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்..

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் போட்டி நாளை மறுநாள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது. வீரர்கள், வீராங்கனைகள் உள்பட 7 இந்தியர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை போட்டிகள் நாளை மறுநாள் முதல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 6 இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.

குதிரையேற்றம்:

குதிரையேற்றம் போட்டிகள் வரும் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார்.

கோல்ஃப்:

ஒலிம்பிக் போட்டிகள் கோல்ஃப் ஆகஸ்ட் 1ம் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் மொத்தம் 4 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

ஹாக்கி:

இந்திய அணி தங்கப்பதக்கத்தை அதிகளவில் கைப்பற்றியுள்ள குழு விளையாட்டான ஹாக்கி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. ஹாக்கிப் போட்டித் தொடர்கள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி சார்பில் 16 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஜூடோ:

ஜூடோ விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார்.

படகுப்போட்டி:

ஒலிம்பிக் தொடரில் படகுப்போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் பங்கேற்கின்றனர்.

துப்பாக்கிச்சுடுதல்:

இந்தியாவிற்கு தனிநபர் பிரிவில் முதல் தங்கத்தை பெற்றுத்தந்த விளையாட்டாக துப்பாக்கிச்சுடுதல் உள்ளது. துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் 21 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

நீச்சல்:

ஒலிம்பிக் தொடரில் நீச்சல் போட்டிகள் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடப்பு ஒலிம்பிக்கில் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா சார்பில் மொத்தம் 6 பேர் கலந்து கொள்கின்றனர்.

பாய்மரப் படகுப்போட்டி:

ஒலிம்பிக்கில் பாய்மரப் படகுப்போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 2 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

டென்னிஸ்:

டென்னிஸ் போட்டிகள் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2 பேர் பங்கேற்கின்றனர்.

மல்யுத்தம்:

சமீபகாலமாக உலக அரங்கில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்றாகும். இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 6 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

பளுதூக்குதல்:

பளுதூக்குதல் விளையாட்டில் இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார். இந்த போட்டிகள் வரும் 7ம் தேதி நடக்கிறது.

நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்கிறது. 16 போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பில் 112வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget