மேலும் அறிய

IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்ட் அபார சதம்...! ஆல்ரவுண்டர் ஹர்திக் கலக்கல்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா அசத்தல்..!

IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்டின் அபார சதம் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் கலக்கலான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இந்திய அணிக்கு 260 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சொதப்பிய ஷிகர்தவான் இந்த போட்டியிலும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித்சர்மா 17 பந்தில் 4 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி இந்த போட்டியிலும் ரசிகர்களை ஏமாற்றினார்.


IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்ட் அபார சதம்...! ஆல்ரவுண்டர் ஹர்திக் கலக்கல்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா அசத்தல்..!

விராட்கோலி 22 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், முதல் 3 விக்கெட்டுகளையும் கடந்த போட்டியில் அசத்திய டோப்ளே வீழ்த்தினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அவர் 16 ரனகளில் வெளியேற இந்தியா 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, இந்திய அணிக்கு ஆபத்பாந்தவனாக ரிஷப்பண்ட் – ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால் இருவரும் ஓரிரு ரன்களாக எடுத்தனர். பின்னர், மெல்ல மெல்ல அதிரடிக்கு மாறினர். ரிஷப்பண்டும், ஹர்திக் பாண்ட்யாவும் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினர். அரைசதம் விளாசிய பிறகு இருவரும் ரன் வேகத்தை அதிகரித்தனர். அணியின் ஸ்கோர் 205 ரன்களை எடுத்தபோது இந்த ஜோடி பிரிந்தது. அபாரமாக ஆடிய ஹர்திக்பாண்ட்யா 55 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்ட் அபார சதம்...! ஆல்ரவுண்டர் ஹர்திக் கலக்கல்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா அசத்தல்..!

ரினுஷப்பண்ட் – ஹர்திக்பாண்ட்யா ஜோடி 5வது விக்கெட்டிற்கு 133 ரன்களை விளாசினர். ஹர்திக் பாண்ட்யா அவுட்டான பிறகு சிறிது நேரம் நிதானம் காட்டிய ரிஷப்பண்ட் அதிரடிக்கு மாறினார். பின்னர், 106 பந்துகளில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை ரிஷப்பண்ட் விளாசினார். சதத்திற்கு பிறகு ரிஷப்பண்ட் பவுண்டரிகளாக விளாசினார். டேவிட் வில்லி வீசிய 42வது ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். அடுத்த ஓவரிலே பவுண்டரி விளாசி ரிஷப்பண்ட் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

ரிஷப்பண்ட் 113 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 125 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது ரிஷப்பண்டிற்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget