தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள் - சீர்காழி பெரிய கோயிலில் பரபரப்பு!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 100 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Continues below advertisement


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்காக  சட்டைநாதர் கோயிலை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கும்பாபிஷேக விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 

Ponniyin Selvan 2: சோழர்களுடன் விமானத்தில் பயணித்த பூங்குழலி... ப்ரொமோஷன் பணிகளைத் தொடங்கிய பொன்னியின் செல்வன் படக்குழு!


இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 22 ஐம்பொன் சிலைகளும், மேலும் 100க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு நடந்த கொடூரம்... பெண் ஆசிரியர்கள் செய்த காரியம்... அமெரிக்காவை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..!


மேலும் இந்து சமய அறநிலையத் துறையினர், வருவாய் துறையினரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22  ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வுக்கு பிறகே முழ விவரம் தெரியவரும்.

MI vs KKR Highlights: வெங்கடேஷ் ஐயரின் சதம் வீண்; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி..!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

Continues below advertisement
Sponsored Links by Taboola