மேலும் அறிய

அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை, துவாக்குடி நகராட்சியில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கல் குவாரிகளுக்கு மாற்ற வேண்டும்

தஞ்சாவூர்: திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை கைவிடப்பட்ட கல் குவாரிகள் கொண்டு சென்று கொட்ட வேண்டும் என்று தவெக எம்எல்ஏவின் முன் மொழிவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை, துவாக்குடி நகராட்சியில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கல் குவாரிகளுக்கு மாற்ற வேண்டும் என்ற திருவெறும்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ நவலப்பட்டு விஜியின் முன்மொழிவு திருச்சியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த யோசனைக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

60 ஆண்டுகாலப் பிரச்சினை

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 47.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியின் ஒட்டுமொத்தக் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக, அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுமையாக மீட்பது அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர் மக்களின் முதன்மைக் கோரிக்கையாக இருந்தது.

பயோமைனிங் பணிகள் விறுவிறுப்பு

தற்போது இந்தக் குப்பைகளை அறிவியல் பூர்வமாக அகற்ற 'பயோமைனிங்' (Biomining) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் மூலம் ஏற்கனவே 38 ஏக்கர் நிலம் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடிக்குக் கீழே பல ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் சுமார் 6.1 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளைச் சுத்திகரிக்கும் மூன்றாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சர்ச்சையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ-வின் ஆய்வு

தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரியமங்கலம் பகுதியில் தவெக எம்எல்ஏ., நவலப்பட்டு விஜி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு தேங்கியுள்ள பழைய குப்பைகளை முழுமையாக அகற்றி, துவாக்குடி பகுதியில் பயன்பாடின்றி கைவிடப்பட்டுக் கிடக்கும் ஆழமான கல் குவாரிகளுக்குள் கொட்டி நிரப்பலாம் என்று அவர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தார். இந்த யோசனைதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும்: ஆர்வலர்கள் எச்சரிக்கை

எம்.எல்.ஏ-வின் இந்த முன்மொழிவை முற்றிலும் அறிவியல் பற்றிய அறிந்து கொள்ளாத தன்மை என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் சாடியுள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சுத்திகரிக்கப்படாத மற்றும் மக்காத திடக்கழிவுகளைக் கல் குவாரிகளில் கொட்டுவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும். குப்பைகளிலிருந்து கசியும் 'லீச்சேட்' (Leachate) எனப்படும் நச்சுத் திரவம், பாறைகளின் இடுக்கில் இறங்கி ஒட்டுமொத்த நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (Groundwater aquifers) முற்றிலுமாகப் பாழாக்கிவிடும். கைவிடப்பட்ட கல் குவாரிகளை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்ற வேண்டுமே தவிர, குப்பை தொட்டியாக்கக் கூடாது. குப்பைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது" என்று எச்சரித்துள்ளனர்.

மாநகராட்சி தயங்குவது ஏன்? ₹3 கோடி அபராதப் பின்னணி

திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இந்த யோசனையைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், கடந்த ஆண்டு திருப்பூர் மாநகராட்சி இதேபோலப் பயன்பாடற்ற கல் குவாரியில் நகராட்சித் திடக்கழிவுகளைக் கொட்டியதற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) அதற்கு ₹3 கோடி அபராதம் விதித்ததுதான். எனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மற்றும் மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்புகளின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும், அபராதங்களையும் சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி விளக்கம்

விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தனது முன்மொழிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று எம்.எல்.ஏ நவல்ப்பட்டு விஜி தெரிவித்துள்ளாராம். இந்தக் கல் குவாரிகளில் கொட்டப்படும் குப்பைகள் பெரும்பாலும் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏற்கனவே மக்கிப்போன நிலையில் உள்ளன. மேலும், இந்தக் குவாரிகள் அனைத்தும் தொழிற்பேட்டைப் பகுதிகளில் (Industrialized area) அமைந்துள்ளதால், குடியிருப்புப் பகுதிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. தற்பொழுது அரியமங்கலத்தில் நடைபெறும் பயோமைனிங் செயல்முறைகள் மீது எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவியல் பூர்வமான தீர்வே அவசியம்

அரியமங்கலம் குப்பை கிடங்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தற்போதைய பயோமைனிங் முறையே போதுமானது என்றும், அதை விடுத்துக் குவாரிகளில் குப்பைகளைக் கொட்டுவது தேவையற்ற சட்டரீதியான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சிக்கல்களை மட்டுமே உருவாக்கும் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இணைந்து மாசற்ற, அறிவியல் பூர்வமான முடிவை எடுப்பதே ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
"பால்பண்ணை சந்திப்பைக் கடக்கணுமா? பக்கத்து ஓட்டலில் டீ சாப்பிட்டே வரலாம் !" – திருச்சி மக்களின் கிண்டல் கலந்த வேதனை
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம், கூடுதல் எடை முறைகேடு? பரபரப்பு புகார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Embed widget