மேலும் அறிய

தவிக்கிறோம்... தடுமாறுகிறோம்: நடவடிக்கை எடுங்க: பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் வேதனை

கும்பகோணம், அரியலூர் போன்ற புற நகர் பஸ்களும் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதனால், இந்த பஸ்ஸ்டாண்டிற்கு பல்வேறு வேலைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டில் போதிய இருக்கைகள் இல்லாததாலும், அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளாலும் பஸ்சிற்காக பயணிகள் வெகு நேரம் நிற்கும் நிலை உள்ளது. மேலும் வயதானவர்கள் இதனால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14.44 கோடி மதிப்பில் 2018ம் ஆண்டில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதில், 39 நகரப் பேருந்துகள் நிற்பதற்கான நிறுத்துமிடங்கள், 93 கடைகள், கழிப்பறைகள், காவல் உதவி மையம், பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. முன்பு இருந்த பஸ் ஸ்டாண்டில் மக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு நெரிசலுடன் இருந்தது. 

இந்த பஸ்ஸ்டாண்டிலிருந்து பூதலூர், மெடிக்கல் காலேஜ், வல்லம், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை, புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, கும்பகோணம், அரியலூர் போன்ற புற நகர் பஸ்களும் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதனால், இந்த பஸ்ஸ்டாண்டிற்கு பல்வேறு வேலைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் வந்து செல்வதற்கேற்ப இந்த பஸ்ஸ்டாண்டில் வசதிகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஸ்மாண்ர்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த பஸ்ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட இருக்கைகள் சில மாதங்களிலேயே உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்த பஸ்ஸ்டாண்டில் கடைகள் எடுத்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக இருக்கைகளில் அமருவதற்கு பயணிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், கடைகளும் எல்லையைக் கடந்து நடைபாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நிழலில் கூட நிற்பதற்கு இடம் கிடைப்பதில்லை.

பயணிகள் தங்களது ஊருக்குச் செல்ல பேருந்துகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் இருக்கிற குறைந்த அளவிலான இருக்கைகளில் அமருவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் நெடு நேரம் நின்று மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

கடைக்கு முன்பாக நிற்கும் பயணிகளையும் கடை வியாரிகள் விரட்டுவதால், நிழக்குடையை விட்டு வெளியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தெரிவித்தது:

பழைய பஸ்ஸ்டாண்டில் வரக்கூடிய பயணிகளுடன் ஒப்பிடுகையில் இருக்கிற இருக்கைகள் மிக மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், பயணிகள் வெகுநேரம் நின்று கொண்டிருக்கும் நிலை உள்ளது. கடைகளிலும் அடுப்பு, தேநீர் கொதிகலன் போன்றவை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய வெப்பம் தாங்காமல் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். கடைகளும் நடைபாதையில் நீட்டிக்கப்படுவதால், பயணிகள் நடந்து செல்வதற்குச் சிரமப்படுகின்றனர். வாடகை அதிகம் என்று கூறிவிட்டு வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இருக்கைகள் மீதும் அதன் கீழும் சிறு வியாபாரிகள் தங்களின் பொருட்களை வைத்து விடுகின்றனர். இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் இலவச கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் வசதி சரியான முறையில் செய்து தரப்பட வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கடந்த வாரத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget