மேலும் அறிய

தஞ்சையில் 9 வாகனங்கள் தற்காலிக தகுதி சான்று ரத்து - ஆய்வின்போது அதிரடி நடவடிக்கை

தஞ்சாவூரில் பள்ளிகளுக்கான வாகனங்களில் ஆய்வுக்கு 235 வாகனங்கள் வந்ததில் 9 வாகனங்கள் தற்காலிக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து கூட்டாய்வு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு

ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு செய்த குழுவினர்

மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், ஏ.டி.எஸ்.பி . முத்தமிழ்செல்வன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமலா அடங்கிய குழுவினர் வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்தனர்.


தஞ்சையில் 9 வாகனங்கள் தற்காலிக தகுதி சான்று ரத்து - ஆய்வின்போது அதிரடி நடவடிக்கை

இருக்கைகள், அவசர வழி கதவு ஆய்வு

இதில் வாகன இருக்கைகள், படிக்கட்டுகள், அவசர வழி கதவு ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் பள்ளி வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், அவசர தேவைக்கான மருந்துகள் போன்றவை உள்ளதா என்பது குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு வாகனத்திலும் ஏறி அனைத்தும் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சரியில்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு துல்லியமாக செய்யப்படுகிறது. படிக்கட்டுகள், அவசர கால கதவு, அவசர தேவை மருந்துகள், இருக்கைகள், பள்ளி குழந்தைகளின் புத்தகப்பை வைக்கும் பகுதி உட்பட அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சரியில்லாத வாகனங்கள் அவற்றை சரி செய்த பின்பே சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதேபோல் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பொழுது அவர்கள் சாலைகளை கடந்து செல்ல உதவியாளர் உதவ வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

715 வாகனங்கள் ஆய்வு

இதேபோல் பட்டுக்கோட்டையில் 260 வாகனங்கள் கும்பகோணத்தில் 220 வாகனங்கள் என மாவட்ட முழுவதும் மொத்தம் 715 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கான வாகனங்களில் ஆய்வுக்கு 235 வாகனங்கள் வந்ததில் 9 வாகனங்கள் தற்காலிக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் சில குறைகள் உள்ள வாகனங்கள் மீண்டும் அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

17 வாகனங்கள் தகுதியில்லாதவை

பட்டுக்கோட்டையில் பள்ளிகளுக்கான வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டதில் மொத்தம் உள்ள 260 வாகனங்களில் 218 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தது. இதை கூட்டாய்வு செய்த போது 17 வாகனங்கள் போதிய தகுதி இல்லாத காரணத்தால் அவற்றை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Embed widget