மேலும் அறிய

தஞ்சாவூரில் கண்ணாடி கலைப் பொருட்கள் செய்முறை பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருள் கலைஞர்கள் செல்வராஜ், வனஜா செல்வராஜ் ஆகியோர்  செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கண்ணாடி கலைப் பொருட்கள் செய்முறை பயிற்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கண்ணாடி கலைப்பொருட்கள்ட செய்முறை பயிற்சி நடக்கிறது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தஞ்சாவூர் கலைகளின் பெட்டகமாக சோழர்காலம் முதல் தற்போது வரை திகழ்கிறது. இயல், இசை, நாட்டியம் மற்றும் நாடகக்கலை மட்டுமின்றி கைவினை கலைப்பொருட்களும் பெருமை சேர்த்து வருகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பல கலைகள் தஞ்சைக்கு வந்தன. அதன்பின் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் மொகலாய கலைப்பாணியும், ஆங்கிலேய கலைபாணிகளும் சேர்க்கப்பட்டன. மராட்டிய மன்னர்களுள் இரண்டாம் சரபோஜியின் காலத்தில் ஓவியம் மற்றும் இதர கலைப்பொருட்கள் தயாரிப்பில் மேன்மையுற்றிருந்தன. தஞ்சையின் கலைகள், காவிரியின் கொடை என்று கூறினால் மிகையாகாது. 


தஞ்சாவூரில் கண்ணாடி கலைப் பொருட்கள் செய்முறை பயிற்சி தொடக்கம்

தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைகளில் கண்ணாடி கலைப் பொருட்களும் ஒன்று. பல்வேறு அளவுகளைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கோயில் பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோவில் தொடர்பான பொருட்கள் கண்ணாடி துண்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து திருமண மண்டபம், வாகன அலங்காரம், பூர்ணகும்பம், அலங்காரத் தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்ற அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் உள்ளன. இந்த கலைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

அழிந்து வரும் இந்த கண்ணாடி கலைப் பொருட்களுக்கு புத்துணர்வு கொடுக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலமாக தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்.  தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் ஒவ்வொரு மாதமும்  முதல் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடைபயணமும், இரண்டாவது சனிக்கிழமை பாரம்பரிய சொற்பொழிவு நிகழ்வும், மூன்றாவது சனிக்கிழமை கைவினை கலை பொருள் பயிற்சி முகாமும், நான்காவது சனிக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சியும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருள் கலைஞர்கள் செல்வராஜ், வனஜா செல்வராஜ் ஆகியோர்  செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கினர்.  இதில் ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை மற்றும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப் பட்டை, சுக்கான் தூள், புளியங்கொட்டை பசை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் குறித்தும் விளக்கம் அளித்தனர். 

பங்கு பெற்ற அனைவரும் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு கண்ணாடி கலை பொருட்களை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், ஓலைச்சுவடி பாதுகாப்பாளர் முனைவர் பெருமாள், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Embed widget