பயணிகள் வசதிக்காக வழித்தட மாற்றம் தேவை: தஞ்சை கலெக்டருக்கு ஏஐடியுசி கோரிக்கை
ரந்தை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: திருவையாறு, கும்பகோணம் பேருந்துகள் கீழவாசல் காமராஜர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் வர அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் பாலம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டி தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கரந்தை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை பகுதி வழியாக செல்லும் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர, ஆட்டோ வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இருந்து வரும் கும்பகோணம் திருவையாறு மார்க்க பேருந்துகள் பள்ளியக்ரகாரம், கரந்தை வழியாக வந்து வடக்கு வாசல், மேலவீதி பகுதியில் சென்று சோழன் சிலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன. இதனால் பயணிகள் பழைய பேருந்து நிலையம் வருவதற்கு நடந்து வர வேண்டி உள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எரிவாயு மற்றும் நேர விரயம் வேறு ஆகிறது என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கோடை வெயிலின் கொடூரம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். எனவே கரந்தை டெப்போ, வெள்ளைப் பிள்ளையார் கோவில் வழியாக கீழவாசல் காமராஜர் சிலை வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு புதிய பேருந்து நிலையம் செல்லலாம்.
நகர பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வரலாம். இதேபோல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு கும்பகோணம் செல்லும் பேருந்துகள் வெள்ளைப் பிள்ளையார் கோவில் கீழவாசல் வழியாக செல்லலாம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. போக்குவரத்து நெருக்கடியும் அதிகமாக இருக்காது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















