போகி பண்டிகையால் புகைமூட்டத்தில் கலந்த பனி மூட்டம் - மயிலாடுதுறையில் வாகன ஓட்டிகள் அவதி

எரியுட்டப்பட்ட பழைய பொருட்களால் ஏற்பட்ட புகை மூட்டத்துடன், பனிமூட்டமும் கலந்து  காலை சூரியன் உதித்தும் 8 மணி  வரை பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது

Continues below advertisement

தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும்  என தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பழையன கழித்து, புதியன புகுந்திடும் நாளாகும். போகி அன்று வீட்டில் தேங்கியிருக்கும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதற்குள் ஒளிந்துள்ள தத்துவமாகும்.

Continues below advertisement

Naga chaitanya on divorce: ''சமந்தாவுக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்'' - விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா


பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை காலை முதலே போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயனற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர். அப்போது மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்து, போகி பண்டிகையை கொண்டாடினர். 

Watch Video: 'முதல்ல நான் போறேன்.. பிறகு நீங்க போங்க' டிராஃபிக் ஜாம் செய்த மலைப்பாம்பு - வைரல் வீடியோ !


இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிபொழிவு அதிகமாக காணப்பட்டும், பகல் வேளையில் கடும் வெய்யில் வாட்டி வந்து,  இந்நிலையில் இன்று போகி பண்டிகையை அடுத்து எரியுட்டப்பட்ட பழைய பொருட்களால் ஏற்பட்ட புகை மூட்டத்துடன், பனிமூட்டமும் கலந்து  காலை சூரியன் உதித்தும் 8 மணி  வரை பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது.

Tamil news | தூத்துக்குடியில் 21 கோடி ஹெராயின்.. ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகன்.. மதுரை மண்டல செய்திகள்!



இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல்  அனைத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கிறனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

India Open Badminton 2022 | இந்திய ஓபன் பேட்மிண்டன்: முன்னணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் !

பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!

Continues below advertisement