மேலும் அறிய

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் ஒரு மாத காலம் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் கடைசியாக 38-வது மாவட்டமாக உருவான, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் முதலமைச்சராக மு‌.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அவருக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதுதான். இந்த சூழலில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் 11 மாவட்டங்களில் மயிலாடுதுறையும் அடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் முக்கிய திட்டங்கள் உருவாக்கம் இன்றி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளிலேயே அரசின் அதிக கவனத்தைக் காணமுடிகிறது. மேலும் சென்ற முறை மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை திமுக கூட்டணியில் கைப்பற்றியுள்ளது. பூம்புகார் மற்றும் சீர்காழியை திமுகவும், மயிலாடுதுறையை திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளதால் ஆளும் கட்சி ஆளுமை நிறைந்த மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது.


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 6 டன் கொள்ளவு கொண்ட நிரந்தர ஆக்சிஜன் கொள்கலன் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொள்கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெறபட்டு வருகிறது. முக்கிய முயற்சியாக மத்திய அரசிடமிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி பெறுவதற்கான நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

குறிப்பாக வருகின்ற ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் என்பதால் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 23 இடங்களில் 5.45 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.


மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்று பார்த்தால், புதியதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளரும், புதிய மாவட்டம் உருவான சில மாதங்களில் சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 12 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளை கும்பலை நான்கு மணிநேரத்தில் பிடித்து அந்த கும்பலின் தலைவனை என்கவுண்டர் செய்த ஸ்ரீநாதாவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்செய்து. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுகுணா சிங்கை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்



மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget