![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Villupuram: துபாயில் உயிரிழந்த ஓட்டுனர்! 6 நாட்களுக்கு பின் தமிழகம் வந்த உடல் - அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் துபாயில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் 6 நாட்களுக்கு பிறகு நேற்று தமிழ்நாடு கொண்டு வரப்பட்டது.
![Villupuram: துபாயில் உயிரிழந்த ஓட்டுனர்! 6 நாட்களுக்கு பின் தமிழகம் வந்த உடல் - அமைச்சர்கள் நேரில் அஞ்சலி Villupuram Driver who died of heart attack in Dubai Body brought to Tamil Nadu after 6 days Ministers pay tribute in person Villupuram: துபாயில் உயிரிழந்த ஓட்டுனர்! 6 நாட்களுக்கு பின் தமிழகம் வந்த உடல் - அமைச்சர்கள் நேரில் அஞ்சலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/856bfdfc7b25dc3f9640713d45f7b2001702828035022113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : சிறுவந்தாடு கிராமத்தை சார்ந்த ஓட்டுனர் துபாயில் மாரடைப்பால் இறந்ததால் அவரது உடல் தமிழக அரசு சார்பில் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி, மஸ்தான் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
துபாயில் உயிரிழப்பு:
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பகுதியை சார்ந்த சாதிக்பாஷா என்பவர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை தமிழகம் கொண்டு வந்து சொந்த கிராமத்தில் இறுதி சடங்குகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களின் குடுமபத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையின் பேரில் இறந்தவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்ததின் பேரில் இன்று சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாரடைப்பால் இறந்த ஓட்டுநரின் உடல் அஞ்சலிக்காக சிறுவந்தாட்டிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திமுக எம் எல் ஏக்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி ஆறுதல் கூறினர்.
மருத்துவ செலவு ஏற்பு:
அப்போது இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணமாக 25 ஆயிரம் வழங்கினார். அதனை தொடர்ந்து தனது ஒரு வயது மகன் வலிப்பு நோயால் அவதிபடுவதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்துவதாகவும், அதனால் அரசு உதவ வேண்டுமென இறந்தவரின் மனைவி கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பொன்முடி தனது மகன் மருத்துவர் என்பதால் சென்னையில் மருத்துவமனை வைத்து இயங்கி வருவதாகவும் அதற்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் இறந்தவரின் மகனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக துக்கவீட்டில் உறுதியளித்தார். துக்க வீட்டில் உதவுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தது அப்பகுதியில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)