சினிமா நடிகையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் ஃபாத்திமா பாபு. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டவர்.  ஃபாத்திமா தற்போது சென்னை அய்யப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் வசித்துவருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான வீடு ஒன்றும் இருக்கிறது. அந்த வீட்டில் 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்க வைத்து முதியோர் இல்லம்போல் நடத்திவருகிறார்.


இந்நிலையில் முதியவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் நேற்று திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த வயதானவர்கள் பீதியும், அச்சமும் அடைந்தனர்.


இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் ஃபாத்திமா பாபு வீட்டுக்கு விரைந்த அவர்கள் வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனர். அந்தப் பாம்பு சாரை பாம்பு ஆகும். அதன் நீளம் ஆறு அடி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!


தொடர்ந்து, பிடிக்கப்பட்ட பாம்பை  கிண்டியில் இருக்கும் பூங்கா ஒன்றில் விட்டனர். திடீரென வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் ஃபாத்திமா பாபு வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


முன்னதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது. நடிகர் சல்மான் கான் கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம்.


3 வது நாள் தொடங்கும் முன்பே முடிந்த இங்கிலாந்தின் கதை... ஹாட்ரிக் வெற்றியுடன் ஹாப்பி மூடில் ஆஸ்திரேலியா!


அந்த கொண்டாட்டத்திற்காக அவர் குடும்பத்துடன் அங்கு வந்து தங்கியிருந்தார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவரை கடித்தது விஷமற்ற பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பை கண்டால் படையே நடங்கும் போது, சாதாரண மனிதர்கள் அச்சம் கொள்வதில் ஆச்சரியமில்லை. அதே நேரத்தில் வீடுகளை தேடி விஷ ஜந்துக்கள் வரும் போது, அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். பாம்புகளை பிடித்து வெளியேற்றும் தன்னார்வலர்கள் பலர் உள்ளனர். அவர்களின் தொடர்பு எண்களை வீட்டில் வைத்து கொள்வது நல்லது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛எனக்கு கழுத்து சுளுக்கிக் கொண்டது’ -RRR விழாவில் உதயநிதி பேச்சு!


Yuvan Shankar-Vijay: 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-யுவன்... வருகிறதா அதிரடி அறிவிப்பு!


Actor Parthiban: ‛முதல் தமிழ் நடிகன் நான் தான்...’ கோல்டன் விசா பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் பார்த்திபன்!