மேலும் அறிய

Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா? வங்கி கணக்கை சரி பாருங்க - இன்னிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6000 வெள்ள நிவாரணம்:

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல்  தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் குறிப்பாக சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது.  ரேசன் கார்டு வைத்திருக்கும் நபர்களை டோக்கன் மூலம் நியாய விலைக் கடைகளுக்கு குறிப்பிட்ட நாளில் வரவழைத்து பணம் வழங்கப்பட்டது.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்குள்ள முகவரியில் ரேஷன் கார்டு இல்லாமல் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது. இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா?

அதன்படி, ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.   இதனால், ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர். உரிய வீட்டு முகவரி சான்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இதில் சென்னையில் மட்டும் ரேசன் கார்டு இல்லாத 4.90  லட்சம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை 6000 ரூபாய் நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை. 

நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், இன்று விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முதற்கட்ட பட்டியலில் நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு முதலமைச்சர் பிறந்தநாளான இன்று அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  எத்தனை பேருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் அரசு தரப்பில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

HBD CM Stalin: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்! பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget