மேலும் அறிய

அதிகரிக்கும் கொரோனா... பேருந்து நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு

நேற்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்தை கடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நடத்துநர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்தை கடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம்  அணிய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பொதுவாக பேருந்துகளில் நடத்துநர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டிக் கொண்டுள்ள டிக்கெட்டுகளை பிரிக்க எச்சில் தொட்டு பின் டிக்கெட்டுகளை கிழித்து தருவது வழக்கம். 

காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த இந்த வழக்கம் கொரோனா முதல் மற்றும் 2 ஆம் அலையின் போது மாற்றம் செய்யப்பட்டது. கொரோன பரவ வாய்ப்புள்ளதால் எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பேருந்து நடத்துநர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எச்சில் தொட்டு டிக்கெட்டை வழங்குவதால் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுடன் பெற்றுக்கொள்வதாகவும், அதிகளவில் பயணிகள் எச்சில் தொட்டு அளிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதால் இனிவரும் காலங்களில் தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேசமயம் நடத்துநர்களுக்கு தேவையான ஸ்பாஞ்சை பணிமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget