![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
OPS Statement: யானை பசிக்கு சோளப்பொறியா? தேர்தல் வாக்குறுதியில் இருப்பது போல முதியோர் உதவித்தொகையை உயர்த்துக - ஓ.பி.எஸ்.
தேர்தல் வாக்குறுதிப்படி சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
![OPS Statement: யானை பசிக்கு சோளப்பொறியா? தேர்தல் வாக்குறுதியில் இருப்பது போல முதியோர் உதவித்தொகையை உயர்த்துக - ஓ.பி.எஸ். OPS Statement old age pension scheme increses as 1500 o paneerselvam Emphasis OPS Statement: யானை பசிக்கு சோளப்பொறியா? தேர்தல் வாக்குறுதியில் இருப்பது போல முதியோர் உதவித்தொகையை உயர்த்துக - ஓ.பி.எஸ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/1be2ac319b1d5541e58680127e53eda11690029006608572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேர்தல் வாக்குறுதிப்படி சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யானைப் பசிக்கு சோளப்பொறியா?
”தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது அரசு உதவித் தொகை பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 இலட்சம் பேருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்." என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் கடந்த நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளது "யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
ஓய்வூதிய உயர்வு:
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துவிட்டு மவுனமாக இருந்துவிட்டது. இதே முறையைத்தான் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய உயர்விலும் தி.மு.க. அரசு கடைபிடித்து இருக்கிறது.
அதுவும் ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்களுக்குப் பிறகு இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே 32 இலட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரியைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, ஒன்பது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் 34,62,034 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், தற்போதைய உயர்வின்மூலம் 30 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று தி.மு.க. அரசு கூறியுள்ளது. இதன்படி பார்த்தால், பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் குறைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும். எது எப்படியோ, அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உதவித் தொகை பெற்றுவரும் அனைவருக்கும் இந்த உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது பயனாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
1500 ரூபாய்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் ஒன்பது திட்டங்களில், கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பயன்பெறக்கூடிய இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் பங்கும் இருப்பதால், அதிக அளவு நிதிச்சுமை ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)