மேலும் அறிய

M/s உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கை..

M/s உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில், பங்குதாரர்கள் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதைக் குறித்து எந்த விவரத்தையும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை..

உதயநிதி அறக்கட்டளையின், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அறக்கட்டளைக்கு சொந்தமான 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34.7 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்கத்துறை ட்வீட்:

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “25/5/2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. M/S உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் அதுதொடர்பான வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் க்ரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லல் குழும மோசடி என்ன?

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் 114 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் கைது செய்தனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது:

சென்னையைச் சேர்ந்த கல்லல் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனம், போர்ச்சுகலை சேர்ந்த பெட்டிகோ கொமர்சியோ நிறுவனத்தை முதலீடுகளுக்காக அணுகியிருந்தது . பெட்டிகோ கொமர்சியோவின் ஒரு கிளை ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப் வளாகத்தில் உள்ளது. அதன்படி, தங்களுக்கு 70% பங்கும், கல்லல் குழுமத்திற்கு 30% பங்கும் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  போர்ச்சுகல் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும், கல்லல் குழுமத்தின் இரண்டு நிறுவனர்களும் சேர்ந்து நிறுவனத்தை நடத்தலாம் என முடிவு எட்டப்பட்டது.

ஒப்பந்தங்களை மீறி மோசடி:

ஒப்பந்தங்களை மீறி கல்லல் குழுமம் செயல்படுவதாக, போர்ச்சுகல் நிறுவனம் குற்றம்சாட்டி வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கனிம வள வணிகத்தில் சுமார் 114 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டபட்டது. மேலும் தொழில் வளர்ச்சிக்காக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து, இல்லாத நிறுவனத்துடன்  வணிக ஒப்பந்தம் செய்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போர்ச்சுகல் நிறுவனத்தின் இயக்குனர் கவுரவ் சாச்ரா புகார் மனு ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் கல்லல் குழுமத்தின் இயக்குனர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.  இந்த நிலையில்தான், கல்லல் குழும மோசடி உள்ளிட்ட சில வழக்குகள் தொடர்பாக,  உதயநிதி அறக்கட்டளையின் பெயரில் உள்ள அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணகில் இருந்த பணம் முடக்கப்பட்டுள்ளது.

M/s உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில், பங்குதாரர்கள் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதைக் குறித்து எந்த விவரத்தையும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை..

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
Embed widget