Heavy Rain: திடீரென சூழ்ந்த கார்மேகங்கள்! சென்னையை வெளுத்து வாங்கும் கனமழை! எங்கெல்லாம்?
சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் திடீரென கனமழை பெய்து வருகிறது.

சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் திடீரென கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், கோயம்பேடு, வளசரவாகம், கோடம்பாக்கம், போரூர், மதுரவாயல், நெற்குன்றம், கலைஞர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணாநகர், செனாய் நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி,ஆயிரம் விளக்கு, வடபழனி, உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், பெரிய பாளையம், கும்மிடிப்பூண்டி, கொளத்தூர், ரெட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் கடந்த ஒருமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மதியம் 2.30 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வெப்பசலனம் காரணமாக சென்னையில் மழை பெய்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்மையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்திய விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 3 விமானங்கள் தாமதமாக வருகின்றன. சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

