![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Jaffer Sadiq: ஜாஃபர் சாதிக் மீது ED வழக்கு.. போதை பொருள் கடத்தல் வழக்கில் செம்ம ட்விஸ்ட்!
சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
![Jaffer Sadiq: ஜாஃபர் சாதிக் மீது ED வழக்கு.. போதை பொருள் கடத்தல் வழக்கில் செம்ம ட்விஸ்ட்! Enforcement Directorate ED files case against Tamil Film producer Jaffer Sadiq following arrest over drug smuggling Jaffer Sadiq: ஜாஃபர் சாதிக் மீது ED வழக்கு.. போதை பொருள் கடத்தல் வழக்கில் செம்ம ட்விஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/10/b937ab1793ddd87444be3f84711199761710074847266729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாஃபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாஃபர் சாகிக்:
உணவு பொருள் என்ற பெயரில் சூடோபெட்ரின் என்ற போதை பொருளை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாஃபர் சாதிக் கடத்தியுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவரால் இயக்கப்படும் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் 45 தளவாடங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இதில் சுமார் 3500 கிலோகிராம் சூடோபெட்ரின் (போதைப்பொருள்) உள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து ஜாஃபர் சாதிக் பெரும் பணத்தை சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை திரைப்படம், கட்டுமானம், ஓட்டல் போன்ற தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அவரது நிதி தொடர்புகள், அவரது நிதி ஆதாரங்கள் மற்றும் போதைப்பொருள் வருமானத்தில் பயன் அடைந்தவர்களை அடையாளம் காண போதைப் பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா?
கடந்த 3 ஆண்டுகளாகவே இவர்கள் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புக் கொண்ட போதைப் பொருளை உணவுப்பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கும்பலுக்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த ஜாஃபர் சாதிக் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அதேபோல் அமீர் நடித்து வரும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் அவர் தயாரித்து வருகிறார். ஜாபர் சாதிக் கைதை தொடர்ந்து, நடிகர் அமீரிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க: "இதுதான் என் அரசியல்" திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? கமல்ஹாசன் பரபர விளக்கம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)