மேலும் அறிய

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

தீபாவளி பண்டிகை இந்த மாதம் 12ஆம் தேதி வர உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு மற்றும் கார விற்பனை கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு உணவு பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். சமையலறையில் உள்ள பொருட்களை பாதுகாப்பது, இனிப்பு மற்றும் காரங்களை தயாரிக்கும் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள், இனிப்பு மற்றும் காரங்களில் பயன்படுத்தக்கூடிய நிற ஊட்டிகளின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் இனிப்பு மற்றும் காரங்கள் எந்த அளவிற்கு நிறைவூட்டிகளை பயன்படுத்த வேண்டும் என பலகாரங்களை கொண்டு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன், இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் பலகார கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எவ்வாறு இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என விளக்கி கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பண்டிகை காலங்களில் தற்காலிக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பவர்கள் வருவார்கள் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் கூறப்பட்டது. பலகாரங்களை எவ்வாறு தயாரிக்க வேண்டும், பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புகளை எவ்வாறு பதப்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் இனிப்பு மற்றும் கார உணவுகளை தயாரிக்கும் கடைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட உள்ளது. பதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி அதின் பேரில் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்-சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 10 உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 22 பகுதிகளில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் முதலில் தற்காலிகமாக கடை வைத்து நடத்தும் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களிடம் ஆய்வு நடத்துவார்கள். திருமண மண்டபங்களில் பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது. அந்தப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முதலில் ஆய்வு செய்வார்கள். பொதுமக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பேரில் தற்காலிகமாக இனிப்புகளை தயாரிப்பவர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது புகாரை 9444042322 மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி உள்ளது அதையும் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் புகார் வேலை தெரிவிக்கலாம். அதேபோன்று இனிப்புகளில் நெய்க்கு பதிலாக டால்டா கலப்பது கண்டறியப்பட்டார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக இணைப்பு தயாரிக்கும் உரிமையாளர்களுக்கு தற்காலிக லைசென்ஸ் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது அதனை பெற்றால் மட்டுமே உணவு பொருட்களை தயாரிக்க அனுமதி வழங்கப்படும். ஆவினை கெட்டுப் போன உணவுகள் விற்கப்படுவது குறித்த கேள்விக்கு, உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு, அன்னதானமும் இலவசமாக கொடுக்கும் உணவும் எதுவாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் உணவு பாதுகாப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..Extra Price in TASMAC |’’அநியாயம் பண்றாங்க’’பாட்டிலுக்கு 10 ரூபாய் EXTRA! புலம்பும் மதுபிரியர்கள்KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
Breaking News LIVE: திருமலை திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Kylian Mbappe: பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
6 Airbag Cars: உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Embed widget