பாஜகவிற்கு ஒரு சில இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததை மட்டும் வைத்துக்கு கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க கூடாது, அது கூட்டணி கட்சிகளால் உயர்த்தது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


திருநாவுக்கரசர் 75வது பிறந்தநாள் வழிபாடு 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சுவாமி திருக்கோயில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனது 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,


15 years of Naadodigal: காதலுக்காக வாழ்க்கையைப் பணயம் வைத்த நண்பர்கள்.. 'நாடோடிகள்' ரிலீஸாகி 15 வருஷமாச்சு!




கள்ளச்சாராயம் விவகாரம் 


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா? தவறா? என்று விமர்சிப்பது, தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. 


NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்




அரசுக்கு லாபம் 


அந்த இடத்தில் தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சியது அங்குள்ள காவல்துறையினருக்கு தெரியாமல் நடந்திருக்காது. இனி வரும் காலங்களில் அங்கு காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு மது விற்பனை மூலமாக  45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் 4,50,000 கோடி ரூபாய் மருத்துவ செலவு தமிழ்நாடு அரசுக்கு குறையும்.


Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்





கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான். 


நாடகமாடும் தமிழக அரசு; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லையா?- அன்புமணி கேள்வி




பாஜக மீது விமர்சனம் 


மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓபிஎஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பாமக உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பாஜக வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது என்றார்.


SSC CGL Recruitment 2024: டிகிரி போதும்..17,727 மத்திய அரசுப் பணியிடங்கள்; ரூ.1.42 லட்சம் வரை ஊதியம்- விண்ணப்பிப்பது எப்படி?