மயிலாடுதுறை அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆன நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வங்கியில் கடன் பெற்ற கூலி விவசாய தொழிலாளர்


மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடியை சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி முனுசாமி. இவர் தனியார் வங்கியில் சுமார் ஒன்றரை லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக வருவாய் ஈட்ட முடியாததால் வாழ்வாதார இல்லாத இழந்து அண்மை காலமாக, அவர் பெற்ற கடன் தொகைக்கான தவணை பணத்தினை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. 


"இது சட்ட பிரச்னை இல்ல.. சமூக பிரச்னை" மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குற்றமா? மத்திய அரசு பதில்!




அவமானம்படுத்திய வங்கி ஊழியர்கள் 


இந்த சூழலில், முனுசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்ற வங்கி ஊழியர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. "நீ செத்து விடு, அதன் மூலம் வரும் காப்பீட்டு தொகையினை தாங்கள் கிளைம் செய்து கொள்கிறோம்" என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவமானம் தாங்காத முனுசாமி,  இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


பிரபல நடிகை வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி திருட முயன்ற மர்ம நபர்கள்? சென்னையில் பரபரப்பு




உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் 


இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தலைமையில், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குத்தாலம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குத்தாலம் காவல்துறையினர், தனியார் வங்கி மேலாளர் மற்றும் தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


விஜய் மாநாடு; காமாட்சி அம்மன் சென்டிமென்ட்: பெரியார் புகைப்படத்திற்கு முன் நடந்தேறிய பந்தல் கால் நடும் விழா..




Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)