மேலும் அறிய

பூம்புகார் கடலில் சோகம்: தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன் அலையில் சிக்கி உயிரிழப்பு!

தை அமாவாசையையொட்டி பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன், கடலில் மூழ்கி மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தை அமாவாசையையொட்டி பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் தந்தைக்கு திதி கொடுக்க வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மகன், கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மகாராசபுரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (52). விவசாயியான இவர், இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தனது மறைந்த தந்தைக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரைக்கு வந்துள்ளார்.

காவிரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திதி கொடுப்பது புண்ணியமாகக் கருதப்படுவதால், இன்று காலை முதலே அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். முருகானந்தமும் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்து முறைப்படி திதி காரியங்களைச் செய்துள்ளார்.

கடல் அலையில் சிக்கிய சோகம்

திதி கொடுத்து முடித்த கையோடு, புனித நீராடுவதற்காக பூம்புகார் கலங்கரை விளக்கம் (Light House) எதிரே உள்ள கடல் பகுதிக்கு முருகானந்தம் சென்றுள்ளார். அவர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழும்பிய ராட்சத அலையொன்று அவரை நிலைகுலையச் செய்தது.

அடுத்த சில நொடிகளிலேயே கடல் நீர் அவரை உள்நோக்கி இழுத்துச் சென்றது. சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டு, கரையில் இருந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அலறியடித்தனர். அவர்களின் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மீட்புப் பணியும் முதலுதவியும்

தை அமாவாசை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பூம்புகார் கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சத்தம் கேட்டவுடன் விரைந்து செயல்பட்ட கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த முருகானந்தத்தை மீட்கப் போராடினர்.

தீவிர முயற்சிக்குப் பிறகு, உயிருக்கு போராடிய நிலையில் முருகானந்தத்தை மீட்ட வீரர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் நேர்ந்த துயரம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த தகவலைக் கேட்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அவரது மனைவி கனிமொழி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்கச் செய்தது. "தந்தைக்கு புண்ணியம் தேடித் தர வந்த இடத்தில், மகனே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது."

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகானந்தத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையிலும், கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முருகானந்தத்திற்கு கனிமொழி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு எச்சரிக்கை

விஷேச நாட்களில் கடலோரப் பகுதிகளில் புனித நீராட வரும் பக்தர்கள், ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget