மேலும் அறிய

அதிர்ச்சி.. கடவுளிடம் கைவரிசை.. கொள்ளையனுடன் சிறுவர்களும் சேர்ந்த பரிதாபம்..!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த மாதம் நிகழ்ந்த உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று நபர்களைக் கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மூன்று மாதங்களாகப் பல்வேறு மாவட்டங்களில் கோயில் உண்டியல்களை உடைத்துத் தொடர் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் மற்றும் புகார்

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள புலிஸ்வரி அம்மன் கோயில், அப்பகுதி மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாகக் கருதி வழிபடப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூவர், கோயிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றனர்.

மறுநாள் காலையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாகக் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

காவல்துறையின் தீவிர விசாரணை மற்றும் கைது

உண்டியல் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கொள்ளிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் சமீபத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்தத் தொடர் தேடுதல் வேட்டையின் பலனாக, இந்தத் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் காரைக்காலைச் சேர்ந்த வெற்றி (19) மற்றும் அவருடன் தொடர்புடைய இரண்டு இளம் சிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் மூவரையும் கைது செய்து, கொள்ளிடம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர் கோயில் திருட்டுகள் அம்பலம்

காவல்துறையினரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் உண்டியலை உடைத்துத் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்கள் கடந்த மூன்று மாத காலமாகத் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவலாக வெளிவந்தது.

இவர்கள், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிறிய மற்றும் கிராமக் கோயில்களைக் குறிவைத்து, அங்குள்ள உண்டியல்களை உடைத்துத் திருடி வந்தது உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத கிராமக் கோயில்களைக் குறிவைத்தே இவர்களின் கைவரிசை இருந்துள்ளது. இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களால், அந்தப் பகுதிகளில் பக்தர்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. தற்போது இந்தத் கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம், பல கோயில் திருட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

கைது செய்யப்பட்ட வெற்றி மற்றும் இரண்டு இளம் சிறார்களிடமிருந்து, கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் திருடப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் சில்லறைக் காசுகள் என மொத்தம் ரூ. 3,202 கைப்பற்றப்பட்டன.

மேலும், திருட்டுச் சம்பவங்களுக்கு இவர்கள் பயன்படுத்திய முக்கிய உபகரணங்களான சுத்தியல், உளி ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குறிப்பாக, திருட்டுச் சம்பவங்களை எளிதாகச் செய்யவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொள்ளையடித்த பணத்துடன் விரைந்து செல்லவும் இவர்கள் பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெற்றி மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

அவருடன் பிடிபட்ட இரண்டு இளம் சிறார்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல்பாடு, மாவட்டங்களில் உள்ள பிற கோயில்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
"கர்நாடகா வீசும் வலையில் முதல்வர் விழந்து விடக்கூடாது!" - காவிரி விவகாரத்தில் கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
Embed widget