மேலும் அறிய

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழுஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்துள்ள நிலையில் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் இருந்து ஏராளமான நபர்கள் குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பல நபர்கள் ஊருக்கு திரும்ப முடியாமலும் அதே போன்று மர்மமான முறையில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கொரடாச்சேரி சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மகன் முத்துக்குமரன், வயது 40. இவர் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துக்குமரனின் பெற்றோர், மனைவி, மகன்கள், உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்?  - கதறி அழுத மனைவி

மேலும் முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து முத்துக்குமரனின் மனைவி வித்யா கூறுகையில்...  “எனது கணவர் முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அதன் பின்னர் இரண்டு தடவை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது வேலை கஷ்டமாக உள்ளதாகவும் என்னை ஒட்டகம் மேய்ப்பதற்கு பாலைவனத்தில் விட்டு விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாக கூறினார் இந்த நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சாவில் மர்மம் உள்ளது.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்?  - கதறி அழுத மனைவி

எனவே மத்திய மாநில அரசுகள் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரின் உடலை பத்திரமாக மீட்டு தர வேண்டும்” எனவும் கண்ணீர் மல்க அவருடைய மனைவி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கூத்தாநல்லூர் மட்டுமின்றி லட்சுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசே மத்திய அரசு வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரனை படுகொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவிக்கும் முத்துக்குமரனின் குடும்பத்திற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தக்க நிதியும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற போஸ்டரை அடித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இன்று முத்துகுமரனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூத்தாநல்லூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பாஜகவினர் கண்டன பேரணி நடத்தி கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget