விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 





இந்நிலையில் கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட மன்குண்டாம் பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி மற்றும் பானு என்ற இரு பெண்கள் உயிரிழந்தனர்.





 


 

தகவல் தெரிந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, உயிரிழந்த இருவர் உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெடி விபத்து ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண