மேலும் அறிய

”தண்ணீர் கிடைக்காதோ என்ற அச்சத்தில் சிறுநீரை பாட்டிலில் சேமித்தோம்”- ரோப் கார் விபத்தில் தப்பியவர்களின் சோகக் கதை!

இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வழித்தடமான திரிகுட்டில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தவித்தவர்கள் பகிர்ந்த வேதனைமிகு அனுபவங்கள்.

ஜார்காண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் உள்ள திர்குட் மலைப்பகுதியில் ஏற்பட்ட ரோப் கார் விபத்தில் மக்கள் சிக்கக்கொண்டு தவித்த அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ரோப் கார்களில் உள்ளவர்களை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது. 2000 அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணி காற்றழுத்தம் காரணமாக மிகவும் கடினமாக இருந்ததாக பேரிடர் மீட்புக் குழு தெரிவித்தது. மேலும், இருட்டிவிட்டதால் மீட்புப் பணிகள் மாலையுடன் நிறுத்தி வைக்கப்பட்டன.

விபத்தில் சிக்கிக்கொண்ட வினய் குமார் தாஸ் கூறுகையில், “ரொம்ப நேரம் ரோப் காரிலேயே மாட்டிக்கொண்டோம். நாங்கள் தண்ணீர் குடித்து வெகு நேரமாகிவிட்டது. எப்போது இங்கிருந்து செல்வோம் என்ற பயம் மிகுந்திருந்தது. இன்னும் ரொம்ப நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று நினைத்தோம். அதனால், சிறுநீரை பாட்டில் சேமித்து கொண்டோம். வெகுநேரம் தண்ணீர் கிடைக்காமல் போனால், அதைக் குடிக்க பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு வந்தோம்.” என்று  ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றாலா வந்த வினய் குமார் கூறினார்.

பீகார் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பெண் கூறுகையில், நாங்க ரோப் காரிலேயே இறந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால், பேரிடர் மீட்புக் குழுவினர் எங்களைக் காப்பாற்றிவிட்டனர்.” என்றார்.

ரோப் கார் விபத்து குறித்து சிறுமி ஒருவர் கூறுகையில், நாங்கள் தண்ணீர் குடித்து, சாப்பிட்டு ஓர் இரவுக்கு மேல் ஆகிவிட்டது. ஓர் இரவு முழுவதும் ரோப் காரிலேயே இருந்ததால் பசியால் தவித்தோம். ரோப் கார் நடுவழியில் நின்றபோது, கீழே விழுந்துவிடுவோம் என்று பயந்தேன்.” என்றார்.

ரோப் கார் விபத்து:

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலைப் பகுதி உள்ளது. இங்கே உள்ல பாபா வைத்தியநாத் கோயிலிலுக்கு செல்வதற்காக 20 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 2 ரோப் கார்கள் நேற்று முன்தினம் மோதிக் கொண்டன. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 12 ரோப் கார்களில் 48 பேர் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோப் காரில் இருந்த ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்தார்.

ரோப் கார்களில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயிற்சிகள் 20 மணி நேரத்துக்கு மேலாக நடந்தன. ஒரு ரோப் காரில் 4 பேர் உட்கார முடியும். 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் வழித்தடத்தில், 25 கேபிள் கார்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஜார்காண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Embed widget