மேலும் அறிய

சுவாசிக்க முடியாமல் திணறும் கிரிக்கெட் வீரர்கள்.. உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு

இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு குறித்த புகார்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்கவில்லை.

இந்தியாவின் முக்கிய நகரங்கள், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. உலக கோப்பை போட்டிகள் நடந்து வரும் நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக IQAir தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய நகரங்களில் நிலவி வரும் மோசமான புகை மூட்டம் குறித்து உலக கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலில் ஆட்டத்தை விளையாடி வருவதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு:

நேற்று முன்தினம், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வங்கதேச, இலங்கை அணிகள் மோதின. போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, மைதானத்தில் வீரர்கள் பயற்சி எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நடைபெறவிருந்த பயிற்சி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சில வீரர்கள் தங்களுடைய ஹோட்டலில் தங்கினர்.

உலகளவில் காற்று மாசால் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக டெல்லி பட்டியலிடப்பட்டபோதிலும், அங்கு போட்டி திட்டமிட்டப்படி நடத்தப்பட்டது. உடல்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை மூட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

வரும் 2036ஆம் ஆண்டு, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் மோடி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பெரும் தடைக்கலாக மாறியுள்ளது.

புகார் கூறும் டாப் கிரிக்கெட் வீரர்கள்:

கடந்த வாரம், செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது சொந்த நகரமான மும்பையில் நிலவும் மாசு அளவு குறித்து அதிர்ச்சி தெரிவித்திருந்தார். காற்றின் மாசு உகந்ததாக இல்லை என இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு அவர் கவலை தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம், பெங்களூரு மைதானத்தில் நடந்த பயிற்சியின் போது, இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், சுவாசிப்பதற்கு இன்ஹேலரை பயன்படுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

காற்று மாசு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், "மும்பையில் விளையாடுவது காற்றை உட்கொள்வது போல இருக்கிறது. மூச்சு விட முடியாத நிலை இருந்தது போல தோன்றியது. இது வேறு எங்கும் நடந்தது இல்லை" என்றார்.

இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு குறித்த புகார்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்கவில்லை.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget