மேலும் அறிய

கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை காக்க அரசின் புதிய முயற்சி..

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பெற்றோர்களை இழந்திருக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது பேரலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. எங்கு பார்த்தாலும் மருத்துவ தேவை இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்ற செய்திகள்தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இதோடு மட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இல்லாமல் ஆம்புலன்சிலேயே காத்திருந்த நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது ஆம்புலன்ஸ் வசதியும் முறையாக இல்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனை வாசலிலே உயிருக்காக போராடுபவர்களை பார்க்கும் யாராக இருந்தாலும் நிச்சயம் கண்களில் கண்ணீர் ததும்பும். அதுவும் கொரொனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை அது வேதனையின் உச்சம். இந்த சூழலில் என்ன செய்வது என்று நிர்கதியாக  நிற்கும் குழந்தைகளை காக்க மத்திய பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.  இங்கு கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பெற்றோர்களை இழந்திருக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை காக்க அரசின் புதிய முயற்சி..
இதோடு பெற்றோர்கள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ. 5000 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள முதல்வர், இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும் பெருந்தொற்றினால் வருமானமின்றி தவிக்கும் நிலையில், வேலைசெய்ய விரும்பும் நபர்களுக்கு அரசாங்க உத்தரவாதத்தின் அடிப்படையில் கடன்களை வழங்குவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நிச்சயம் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்புவதாக அரசு முதல்வர் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து,  மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவிக்கையில், பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைக்கு நலத்திட்ட உதவிகளை உதவும் முதல் மாநிலம் மத்தியபிரதேசம் தான் என  தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்கான அனைத்து தேவைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.  

கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை காக்க அரசின் புதிய முயற்சி..

மேலும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று மட்டும் 8970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 84 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 7 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6679 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இருந்த போதும் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் விநியோகம் முறையாக இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தொடர் உயிரிழப்புகளும் அரங்கேறிவருகிறது.

தலைப்பு செய்திகள்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget