மேலும் அறிய

சமூக அவலத்தின் உச்சம்.. இன்றும் தொடரும் பெண் சிசுக்கொலை.. பெற்ற தாயே வெறிச்செயல்!

நான்காவதும் பெண் குழந்தையே பிறந்ததால் கோபத்தில் தன்னுடைய பிஞ்சு குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் பிறந்த தன்னுடைய பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நான்காவதும் பெண் குழந்தையே பிறந்ததால் அதனால் மன வருத்தத்தில் தன்னுடைய குழந்தையை கொன்றதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு, அந்தப் பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரும் சமூக அவலம்: இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மேற்கு டெல்லியில் உள்ள கியாலா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு அழைப்பு வந்தது. ஆறு நாட்களே ஆன பெண் குழந்தை காணவில்லை என்று அழைப்பாளர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். பிறந்த குழந்தைக்கு இரவு தாமதமாக தாய்ப்பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், கண்விழித்து பார்க்கையில் என் குழந்தை அங்கு இல்லை. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தார்கள்.

பெற்ற குழந்தையை கொன்ற தாய்: சோதனை செய்து கொண்டிருக்கும்போது, தன்னுடைய ​​தையல்களை அகற்ற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அந்த பெண் கூறினார். அவரின் நடவடிக்கை எங்களுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல அவரை அனுமதித்தோம்.

சோதனையின் போது, ​​பக்கத்து வீட்டின் கூரையில் ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், பிறந்த குழந்தை இருந்தது. மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

தாயின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மனம் உடைந்து மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவருக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது.  

பெண் குழந்தை என்பதால் பல சமூக அவமானங்களை எதிர்கொண்டதாக அந்த பெண் கூறினார். குழந்தைக்கு உணவளிக்கும் போது, ​​இந்த எண்ணங்களால் பயந்து, குழந்தையின் கழுத்தை நெரித்து, பின்னர் அதை அருகில் உள்ள கூரையில் எறிந்ததாக அந்த பெண் கூறினார்" என தெரிவித்துள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kavin Murder: கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை
கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை
25% வரி; ரஷ்ய எண்ணெய் வாக்குவதற்கு அபராதம்; போட்டுத்தாக்கும் ட்ரம்ப் - மத்திய அரசின் விளக்கம்
25% வரி; ரஷ்ய எண்ணெய் வாக்குவதற்கு அபராதம்; போட்டுத்தாக்கும் ட்ரம்ப் - மத்திய அரசின் விளக்கம்
Aadi Peruku 2025: ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் ரெடி.. ஜாலியா போங்க
Aadi Peruku 2025: ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் ரெடி.. ஜாலியா போங்க
IND vs ENG: இன்று கடைசி டெஸ்ட் ஸ்டார்ட்.. தொடரை வெல்லுமா இங்கிலாந்து? சமன் செய்யுமா இந்தியா? ஒரே த்ரில்தான்..
IND vs ENG: இன்று கடைசி டெஸ்ட் ஸ்டார்ட்.. தொடரை வெல்லுமா இங்கிலாந்து? சமன் செய்யுமா இந்தியா? ஒரே த்ரில்தான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavin Murder: கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை
கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை
25% வரி; ரஷ்ய எண்ணெய் வாக்குவதற்கு அபராதம்; போட்டுத்தாக்கும் ட்ரம்ப் - மத்திய அரசின் விளக்கம்
25% வரி; ரஷ்ய எண்ணெய் வாக்குவதற்கு அபராதம்; போட்டுத்தாக்கும் ட்ரம்ப் - மத்திய அரசின் விளக்கம்
Aadi Peruku 2025: ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் ரெடி.. ஜாலியா போங்க
Aadi Peruku 2025: ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் ரெடி.. ஜாலியா போங்க
IND vs ENG: இன்று கடைசி டெஸ்ட் ஸ்டார்ட்.. தொடரை வெல்லுமா இங்கிலாந்து? சமன் செய்யுமா இந்தியா? ஒரே த்ரில்தான்..
IND vs ENG: இன்று கடைசி டெஸ்ட் ஸ்டார்ட்.. தொடரை வெல்லுமா இங்கிலாந்து? சமன் செய்யுமா இந்தியா? ஒரே த்ரில்தான்..
Mayiladuthurai Power Shutdown (31.07.2025) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பவர் கட் - எந்தெந்த ஊர் தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown (31.07.2025) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பவர் கட் - எந்தெந்த ஊர் தெரியுமா..?
விசாரணையை தாமதப்படுத்த இப்படி பண்றீங்களா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
விசாரணையை தாமதப்படுத்த இப்படி பண்றீங்களா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Hyundai Upcoming SUV: அயோனிக் 9 முதல் ஹுண்டாய் Ni1i ப்ரீமியம் வரை.. இந்திய சாலையை ஆள வரும் 4 கார்கள் இதுதான்!
Hyundai Upcoming SUV: அயோனிக் 9 முதல் ஹுண்டாய் Ni1i ப்ரீமியம் வரை.. இந்திய சாலையை ஆள வரும் 4 கார்கள் இதுதான்!
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
Embed widget