மேலும் அறிய

சமூக அவலத்தின் உச்சம்.. இன்றும் தொடரும் பெண் சிசுக்கொலை.. பெற்ற தாயே வெறிச்செயல்!

நான்காவதும் பெண் குழந்தையே பிறந்ததால் கோபத்தில் தன்னுடைய பிஞ்சு குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் பிறந்த தன்னுடைய பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நான்காவதும் பெண் குழந்தையே பிறந்ததால் அதனால் மன வருத்தத்தில் தன்னுடைய குழந்தையை கொன்றதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு, அந்தப் பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரும் சமூக அவலம்: இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மேற்கு டெல்லியில் உள்ள கியாலா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு அழைப்பு வந்தது. ஆறு நாட்களே ஆன பெண் குழந்தை காணவில்லை என்று அழைப்பாளர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். பிறந்த குழந்தைக்கு இரவு தாமதமாக தாய்ப்பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், கண்விழித்து பார்க்கையில் என் குழந்தை அங்கு இல்லை. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தார்கள்.

பெற்ற குழந்தையை கொன்ற தாய்: சோதனை செய்து கொண்டிருக்கும்போது, தன்னுடைய ​​தையல்களை அகற்ற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அந்த பெண் கூறினார். அவரின் நடவடிக்கை எங்களுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல அவரை அனுமதித்தோம்.

சோதனையின் போது, ​​பக்கத்து வீட்டின் கூரையில் ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், பிறந்த குழந்தை இருந்தது. மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

தாயின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மனம் உடைந்து மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவருக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது.  

பெண் குழந்தை என்பதால் பல சமூக அவமானங்களை எதிர்கொண்டதாக அந்த பெண் கூறினார். குழந்தைக்கு உணவளிக்கும் போது, ​​இந்த எண்ணங்களால் பயந்து, குழந்தையின் கழுத்தை நெரித்து, பின்னர் அதை அருகில் உள்ள கூரையில் எறிந்ததாக அந்த பெண் கூறினார்" என தெரிவித்துள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
Embed widget