தமிழ்நாடு: 



  • நகர்ப்புறம் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்

  • கரூர், வெண்ணைமலை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அப்பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்ற 42 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் தனது மாமனார் வீடு அமைந்திருக்கும் துறையூர் செங்காட்டுபட்டி பகுதியில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்  

  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை(Vedha Illam) அரசுடைமையாக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

  • Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்! 

  • வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

  • இன்று மதுரை மாவட்டம் முழுவதும் 1200 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.  

  • மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்திட ரூ.99 கோடி, தொழில் நுட்ப சாதனங்கள், தளவாடப்பொருட்கள்,  மற்றும் நூல்கள் வாங்கிட ரூ.15கோடி என மொத்தம் 114 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.


இந்தியா:  



  • பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY- பகுதி V) மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை, நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கல் இலவசமாக வழங்கப்படும். 

  • தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சீரடைந்திருப்பதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 

  • கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.10,949 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,57,698 என அதிகரித்துள்ளது.

  • தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகையை அளிப்பதற்காக ரூ. 3,054 கோடி ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  


விளையாட்டு:  



  • இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  போட்டி இன்று கான்பூரில் தொடங்குகிறது.