திருச்சியில் கடந்த மே 9 ஆம் தேதி திறக்கப்பட்ட பஞ்சாப்பூர் பேருந்து முனையம் தமிழக முதல்வர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது வந்தது, தற்போது இந்த பேருந்து நிலையமானது ஜூலை 16 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

பஞ்சப்பூர் பேருந்து நிலையம்: 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்அமைச்சர் கே.என்.நேரு ''ஓரணியில் தமிழ்நாடு'' பரப்புரையை பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ”திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு கடந்த மே 9 ஆம் தேதி முதலமைச்சரால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும்.

Continues below advertisement

தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரலாம். பொதுமக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். ஆனால் அனைத்து அரசுப் பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

அரியமங்கலம் குப்பை கிடங்கு:

மேலும் பேசிய அரியமங்கலம் குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம். சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது.

பிளாஸ்டிக் சாலை:

தற்போது அந்த பிளாஸ்டிக் மூலம் சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும் குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழலில் அரியமங்கலம் குப்பை கிடங்கிலேயே கொட்டி வருகிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு தான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அந்த திட்டத்தை நிறுத்துவோம்? நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிசாமி நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு ''1500 ரூபாய் தருவோம்'' என பேசுகிறார்.

உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை. நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்?." என்று அமைச்சர் நேரு கூறினார்.