மேலும் அறிய

Kashmir Statehood: மீண்டும் மாநிலமாகிறதா ஜம்மு காஷ்மீர்? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபர பதில்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட வழக்கு:

கடந்த 12 நாள்களாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல, ஜம்மு காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என வரையறுக்கும் உரிமை அம்மாநில சட்டப்பேரவைக்கே உள்ளது. இந்த அதிகாரத்தை அம்மாநில சட்டப்பேரவைக்கு வழங்கியது சட்டப்பிரிவு 35ஏ ஆகும்.

நேற்றைய விசாரணையில், சட்டப்பிரிவு 35ஏ குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு, மற்ற இந்தியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது" என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, முழு மாநில அந்தஸ்தை திரும்பபெற்றபோது கூட்டாட்சி தத்துவம் பின்பற்றபட்டதா? என மத்திர அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மீண்டும் மாநிலமாகிறதா?

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.

"இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எப்போது மீட்டெடுப்பீர்கள் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை எங்களிடம் கொடுங்கள். இதை பதிவு செய்ய விரும்புகிறோம்" என்றும் இந்திய தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

மத்திய அரசு பதில்:

இதற்கு, மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அஸ்ஸாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை எடுத்தக்காட்டாக சுட்டிகாட்டி வாதிட்டார். "நான் மத்திய அரசின் கருத்துகளை கேட்டுள்ளேன். யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது நிரந்தரம் அல்ல. நாளை மறுநாள் பாசிட்டிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். லடாக் யூனியன் பிரதேசமாகவே இருக்கும்.

நாடாளுமன்றத்தில் (மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து) மத்திய அரசு பதில் தெரிவித்திருந்தது. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மாநில அந்தஸ்து வழங்கப்படும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது விரைவில் நடைபெறும் என்பதற்கு சான்றாக ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன" என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget