மேலும் அறிய

Kashmir Statehood: மீண்டும் மாநிலமாகிறதா ஜம்மு காஷ்மீர்? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபர பதில்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட வழக்கு:

கடந்த 12 நாள்களாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல, ஜம்மு காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என வரையறுக்கும் உரிமை அம்மாநில சட்டப்பேரவைக்கே உள்ளது. இந்த அதிகாரத்தை அம்மாநில சட்டப்பேரவைக்கு வழங்கியது சட்டப்பிரிவு 35ஏ ஆகும்.

நேற்றைய விசாரணையில், சட்டப்பிரிவு 35ஏ குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு, மற்ற இந்தியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது" என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, முழு மாநில அந்தஸ்தை திரும்பபெற்றபோது கூட்டாட்சி தத்துவம் பின்பற்றபட்டதா? என மத்திர அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மீண்டும் மாநிலமாகிறதா?

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.

"இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எப்போது மீட்டெடுப்பீர்கள் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை எங்களிடம் கொடுங்கள். இதை பதிவு செய்ய விரும்புகிறோம்" என்றும் இந்திய தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

மத்திய அரசு பதில்:

இதற்கு, மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அஸ்ஸாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை எடுத்தக்காட்டாக சுட்டிகாட்டி வாதிட்டார். "நான் மத்திய அரசின் கருத்துகளை கேட்டுள்ளேன். யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது நிரந்தரம் அல்ல. நாளை மறுநாள் பாசிட்டிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். லடாக் யூனியன் பிரதேசமாகவே இருக்கும்.

நாடாளுமன்றத்தில் (மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து) மத்திய அரசு பதில் தெரிவித்திருந்தது. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மாநில அந்தஸ்து வழங்கப்படும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது விரைவில் நடைபெறும் என்பதற்கு சான்றாக ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன" என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
ஆதார் பிறந்த தேதி மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள்! தவறினால் சிக்கல்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Semiconductor: 1 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் உருவெடுக்கும் செமிகான் 2.0 திட்டம்!
Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
Top 10 Headlines: தமிழகத்தில் இன்று பரபரப்பு… முக்கிய 10 செய்திகள் ஒரே பார்வையில்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!
கான்பூர்-மதுரை சிறப்பு ரயில் நீட்டிப்பு: நவம்பர் வரை சேலம் வழியாக பயணம் தொடரும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ..
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
நாகப்பட்டினம் மாவட்ட அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! செப். 8 உள்ளூர் விடுமுறை!
நாகப்பட்டினம் மாவட்ட அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! செப். 8 உள்ளூர் விடுமுறை!
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
Annamalai : மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
Embed widget