மேலும் அறிய

பிரபல ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... மர்ம கும்பல் செய்த காரியம்...என்ன நடந்தது..?

இந்த கும்பல், தம்பதிகளை மிரட்டி பணம் தராவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக அச்சுறுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமராக்களை வைத்து அங்கு தங்கியவர்களின் அந்தரங்க தருணங்களை பதிவு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அறையை, அந்த கும்பல் ஓயோ செயலி மூலம் புக் செய்துள்ளனர்.

இந்த கும்பல், தம்பதிகளை மிரட்டி பணம் தராவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக அச்சுறுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த மோசடியில் ஹோட்டல் ஊழியர்கள் ஈடுபடவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில், இந்த கும்பல் பிரபல ஹோட்டலில் புக் செய்து தங்கியுள்ளதாகவும் பின்னர், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு அங்கு ரகசிய கேமராவை விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சில நாள்களுக்கு பிறகு, அவர்கள் தங்கியிருந்த அதே அறையில் மீண்டும் புக் செய்து தங்குவது போல நடித்து அந்த கேமராவை எடுத்து சென்றுள்ளனர். இறுதியாக, அந்த கேமராவில் பதிவாகியுள்ள தம்பதிகளை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார், அனுராக் குமார் சிங் ஆகிய நான்கு பேர் நொய்டாவில் செயல்படும் மூன்று வெவ்வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த கும்பல், அங்கீகரிக்கப்படாத கால் சென்டர்கள், சட்டவிரோத செயல்களுக்கு போலி சிம்கார்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 11 மடிக்கணினிகள், 21 மொபைல்கள், 22 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் நாடு முழுவதும் செயல்படுவதாக கூறப்படுகிறது. கும்பலைச் சேர்ந்த ஒருவர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மூத்த காவல்துறை அலுவலர் சாத் மியான் கான் கூறுகையில், "தம்பதியினரின் தொலைபேசிக்கு அவர்களது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி அவர்களிடம் பணம் கேட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்ட விஷ்ணு மற்றும் அப்துல் வஹாவ் மிரட்டினர். 

மூன்றாவது குற்றம்சாட்டப்பட்டரான பங்கஜ், மற்ற நபர்களின் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி அதை குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து 11 மடிக்கணினிகள், 7 சிபியுக்கள், 21 மொபைல்கள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் கார்டு, ஏராளமான போலி ஆவணங்கள், ஐ கார்டு, சிம்கார்டு ஆகியவை மீட்கப்பட்டன. அவரது கூட்டாளிகளில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்" என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஓயோ விசாரணையை தொடங்கியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget