மேலும் அறிய

Pulse Oximeter: க்வாரண்டைனா? பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்துவதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இதோ..

வீட்டிலிருந்து கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எப்படி இந்த ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதீக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் பன்மடங்காக உயர்ந்து வரும் நிலையில், இறப்பின் விகிதமும் தொடர்ந்து அதிகரிப்பது வேதனையாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் அவர்களது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்க மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.


Pulse Oximeter: க்வாரண்டைனா? பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்துவதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இதோ..

ஏனென்றால் ஒருவரது ஒருவரது ரத்தத்தில் சாதாரணமாக 95 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் அளவு இருக்கவேண்டும். ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அபாய கட்டத்தினை அடைகின்றனர். எனவே ஆரம்ப கட்டத்திலேயே ஆக்சிஜன் அளவினை கண்காணிக்க வீட்டிலேயே பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

எனவே வீட்டிலிருந்து கொரொனா சிகிச்சை பெறுபவர்கள் எப்படி இந்த ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

1. பல்ஸ் ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்து பார்ப்பதற்கு முன்னர் விரலில் நெயில் பாலிஷ், நகத்தில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. ஆக்ஸிமீட்டரை உபயோகப்படுத்துவதற்கு முன்னர் குறைந்தது 5 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
3. பின்னர் இதயத்தில் வைத்து சீராக துடிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. அதனையடுத்து பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் சுவிட்சினை ஆன் செய்து ஆள்காட்டி அல்லது நடுவிரலில் வைக்க வேண்டும்.
5. ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் அளவும் டிஸ்பிளேயில் தெரியும். ஒருவேளை நிலையான அளவு தெரியாவிடில், சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் ஆக்ஸிமீட்டரை எடுக்காமல் விரலிலே வைத்திருக்க வேண்டும்.
6. ஆக்ஸிமீட்டரில் நிலையான அளவு கிடைத்தவுடன் அளவின் எண்ணிக்கை சரியாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.
7. உடலில் மொத்த ஆக்ஸிஜன் அளவு 95-100 என்ற சதவிகிதத்தில்தான் சீராக உள்ளதாக அர்த்தம். எனவே அந்த அளவு சரியாக உள்ளதா? என்பதை கவனிக்கவேண்டும்.
8. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
9. இதே போன்று நாடித்துடிப்பு 60-80 சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதே 90-120 சென்றால் உடனடியாக மருத்துவரின் அறிவுரைகளை பெற்று அதற்கேற்ற சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.


Pulse Oximeter: க்வாரண்டைனா? பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்துவதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இதோ..

மேலும் மருத்துவர்களின் கூற்றுப்படி வீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்பவர்கள், ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஆக்சிஜன் அளவு மேற்சொன்னபடி சரியாக உள்ளதா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அளவில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தற்போது கொரோனா தொற்றினால் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் நம் உடலில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தான் என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இதோடு வீட்டு தனிமையில் இருப்பவர்கள், ரத்த ஆக்சிஜன் அளவினை நிர்வகிக்க, 4-5 தலையணைகள் உதவியோடு குப்புறப்படுப்பது, பின் வலது புறம் படுப்பது, சிறிது நேரத்திற்கு பின் உட்கார்ந்துவிட்டு இடது புறமாக படுப்பது இறுதியாக மீண்டும் குப்புறப்படுப்பது போன்ற ப்ரோன் வென்டிலேட்டர் முறையினை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதோடு முகத்தினை கீழே வைத்து மார்பினை உயர்த்தி விரைவான சுவாசத்தினை பெற பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Narendra Modi: மோடி படைத்த சாதனை: இந்திய வரலாற்றில் புதிய உச்சம்! நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் பட்டியலில் ஆச்சரியங்கள்!
மோடி படைத்த சாதனை: இந்திய வரலாற்றில் புதிய உச்சம்! நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் பட்டியலில் ஆச்சரியங்கள்!
ரயில் பயணம் எளிதாகிறது! பெங்களூரு–கோழிக்கோடு விரைவு ரயில் சேவை நீட்டிப்பு
ரயில் பயணம் எளிதாகிறது! பெங்களூரு–கோழிக்கோடு விரைவு ரயில் சேவை நீட்டிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில்: பங்குனி உத்திர திருவிழா! பக்தர்கள் கூட்டம், பாதுகாப்பு தீவிரம் - முழு விவரம் உள்ளே!
சபரிமலை ஐயப்பன் கோவில்: பங்குனி உத்திர திருவிழா! பக்தர்கள் கூட்டம், பாதுகாப்பு தீவிரம் - முழு விவரம் உள்ளே!
கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: காருண்யா KR-747 முடிவுகள் வெளியீடு! யாருக்கு 1 கோடி பரிசு? உடனே பாருங்க!
கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: காருண்யா KR-747 முடிவுகள் வெளியீடு! யாருக்கு 1 கோடி பரிசு? உடனே பாருங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget