Breaking News LIVE : அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 21 Apr 2023 04:57 PM
Breaking News LIVE : அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.


இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்தது. நேற்று 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Breaking News LIVE : சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில்  காவேரி ஹாஸ்டலில் BTech இரண்டாம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்கிற கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Breaking News LIVE :கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

Breaking News LIVE :கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

Breaking News LIVE :கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

Breaking News LIVE : மாரியம்மன் கோயிலில் மதநல்லிணக்க அடையாளம்



Breaking News LIVE : '500 கோடியும் வழங்க முடியாது.. மன்னிப்பும் கேட்க முடியாது..' - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!

தி.மு.க. குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்ம என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE : பொறியியல் தமிழ் மொழிப்பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத அனுமதிப்பதா? - ராமதாஸ்



Breaking News LIVE : பிரிட்டன் துணை பிரதமர் திடீர் ராஜினாமா..!

பிரிட்டன் துணை பிரதமரும் நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் இன்று ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவை ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அவர் மீது எழுந்த புகார்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டது. 


இச்சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் டொமினிக் ராப். இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், "நான்தான் விசாரணைக்கு அழைப்பு விடுத்தேன். நான் யாரயாவது கொடுமைப்படுத்தியது கண்டறியப்பட்டால், ராஜினாமா செய்வதாக உறுதியளித்தேன். என் சொல்லைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்.


சுதந்திரமான விசாரணையில் எனக்கு எதிராக கூறப்பட்ட சில கூற்றுக்கள் நியாயமானவை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

Breaking News LIVE : லீவு முடிஞ்சு...ஜூன் 19 கல்லூரி திறப்பு



Breaking News LIVE : மன்னார்குடி-கொளத்தூர்... திராவிட மாடல் பஸ் - முதலமைச்சருக்கு பரிசளித்த எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா



Breaking News Live : ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இரண்டாவது நாளாக விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலில் தனி நீதிபதி உத்தரவை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

Breaking News Live: பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா

பிரிட்டன் துணைப் பிரதமரும் நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப், அதிகார துஷ்பிரயோக புகார் எழுந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Breaking News Live : காவல்துறையினருக்கு சீருடைப்படி உயர்வு -முதலமைச்சர் அறிவிப்பு

காவல்துறையினருக்கு சீருடைப்படி ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

Breaking News Live : ரம்ஜான் பண்டிகை - கேரளாவில் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி கேரளாவில் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 335வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.