மேலும் அறிய

Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...

பீகாரைச் சேர்ந்த ஒருவர், தான் கையில் வைத்திருந்த பால் கீழே கொட்டியதற்கு ராகுல் காந்திதான் காரணம் எனக் கூறி வழக்கு பதிந்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சோனுபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் சவுத்ரி என்பவர்தான், ராகுல் காந்தி மீது ஒரு வினோத வழக்கை ஒன்றை பதிந்துள்ளார். ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததால் பாலை கொட்டிவிட்டதாக தெரிவித்து, அவர் ஒரு வழக்கை பதிந்துள்ளார்.

ராகுல் காந்தி என்ன பேசினார்.?

டெல்லியில், கடந்த 15-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவின்போது, தொழிலாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாங்கள் நியாயமான போராட்டத்தை நடத்துகிறோம் என்று நினைக்க வேண்டாம், இதில் நியாயம் இல்லை, பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே நாங்கள் போராடுவதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம். பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன, அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருவதாகவும் பேசினார்.

ராகுல் காந்தியின் பேச்சால் அதிர்ச்சியடைந்து பாலை கொட்டினேன் - முகேஷ்

இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த முகேஷ் குமார் சவுத்ரி என்பவர், ராகுல் காந்தி மீது வழக்கு ஒன்றை பதிந்துள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையக திறப்பு விழாவில், ராகுல் காந்தியின் பேச்சை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், ஒரு உண்மையான இந்தியனாக மனம் மிகவும் புண்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, ராகுல் காந்தியின் பேச்சு நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில், தான் கையில் வைத்திருந்த பால் வாளியை கீழே போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அதில் 250 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் பால் இருந்ததாகவும், அதனால், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் முகேஷ் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு, கவுஹாத்தியிலும் ஒருவர் வழக்குப் பதிந்து, அதற்கு முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Embed widget