மேலும் அறிய

பயந்து பயந்து நடக்கிறோம்.. பாலம் கட்டித்தாங்க.. மலைவாழ் மக்கள் வேதனை

அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அரசநத்தம் கலசப்பாடி மலையில் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு-ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்.

அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அரசநத்தம் கலசப்பாடி மலையில் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு-ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள். 


பயந்து பயந்து நடக்கிறோம்.. பாலம் கட்டித்தாங்க.. மலைவாழ் மக்கள் வேதனை

காட்டாற்று வெள்ளம் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வாச்சாத்தி அருகே உள்ள மலையில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு  அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, கல்லூரிகள் இங்கு இருந்து சுமார் 7 கி.மீ தூரம் மலை மீது செல்ல வேண்டும்.

 இந்த நிலையில் சித்தேரி மலை பகுதியில் 3 இடங்களில் காட்டாறு வருகிறது. இதில் மழைக் காலங்களில் எப்பொழுதுமே காற்றாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்படும்‌. ஆனாலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் பெண்கள் என இந்த காற்றாற்றில் வருகின்ற வெள்ளத்தில் நடந்து சென்று தங்களது கிராமங்களுக்கு செல்கின்றனர். 

இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக அரூர், சித்தேரி கோட்டப்பட்டி உள்ளிட்ட மலை பகுதியில்  கிராமங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசநத்தம், கலசப்பாடி மலை மீது தொடர் மழை பெய்து வருவதால் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஜேசிபி எந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மலையை விட்டு கீழே இறங்கியவர்கள் மலை மீது ஏற முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் ஜேசிபி இயந்திரம் வரவழைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் மலைவாழ் மக்களை ஆற்றைக் கடந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

 அதேபோல் மலை மீது இருந்து கீழே இறங்கியவர்களும் காற்றாற்று வெள்ளத்தில் ஆற்றைக் கடக்கும் முடியாமல் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இறங்கி சென்றனர். 

ஆனாலும் ஒருசிலர் காற்றாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடந்து சென்றனர். மேலும் அடிக்கடி மழைக் காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரை விட்டு வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 


இதுகுறித்து அலசநத்தம் கலசப்பாடி மலை கிராம மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இது போன்றவை சிரமகத்துக்கு உள்ளாகி வருகிறோம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை இந்த பாலத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என எல்லா அத்தியாவசிய தேவைக்காகவும் நாங்கள் அருவருக்கும் தர்மபுரிக்கும் செல்ல வேண்டி இருக்கு காலையில் பணிக்கு சென்றால் மாலை மழை வந்த உடனேயே இந்த இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது அதனால் பணிக்கு சென்று வருபவர்கள் திரும்பி வீட்டுக்கு செல்லும்போது காட்டாற்றில் வெள்ளம் வருவதால் தவித்து வருகிறோம் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற சிரமத்தை நாங்கள் மேற்கொள்கிறோம் உடனடியாக இந்த காட்டாற்று வெள்ளத்தில் இருந்து எங்களை காப்பாற்றிய பாலம் அமைத்துக் கொடுத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்ப வசதியாக இருக்கும் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்

எனவே இந்த பகுதியில் பாலம் அமைத்துக் கொடுத்தால் இந்த மலைவாழ்மக்களுக்கு வசதியாக இருக்கும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget