மேலும் அறிய

ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வரும் 8ல் ஆரம்பம்

ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும்பனி வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது.

ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும்பனி வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடந்தது 

"மரங்களின் இளவரசி" பனைமரம் அழைக்கப்படுகிறது 

பனை மரங்கள், மரங்களின் "இளவரசி" என அழைக்கப்படுகிறது. ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டில் முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்போது நான்கு முதல் ஐந்து கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 50 சதவீத பனை மரங்கள் உள்ளன.

ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை

சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 20 சதவீத மரங்கள் உள்ளன. ஒரு பனைமரம் 15 மீட்டர் உயரத்தை அடைய 10 ஆண்டுகள் ஆகும். பனை மரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 30 மீட்டர் ஆகும். நிலத்தடி நீரை தக்க வைப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம்

இதனால் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பனை மரங்களை வேருடன் அகற்ற தமிழக அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் இந்திய அளவில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வர்த்தக மதிப்பு ரூ.200 கோடி ஆகும்.

பனையிலிருந்து கிடைக்கும் பத நீரை காய்ச்சினால் பனைவெல்லம் என்ற கருப்பட்டி கிடைக்கிறது. இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. சூறாவளி காற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றலை பனைமரம் பெற்றுள்ளது. தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒகேனக்கலில் 8ஆம் தேதி துவக்க விழா

இதன் தொடக்க விழா வரும் எட்டாம் தேதி ஒகேனக்கல் காவிரி கரையில் நடக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது 

தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வரும் எட்டாம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுக்க பண விதைகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பண விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையின் இரு பக்கங்களிலும் 416 கி . மீ தொலைவிற்கு நடவிருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள், மாணவர்கள் சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர்.

அனைவரையும் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியில் தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவிகள் சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநில மரமான பனைமரத்தை நட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Embed widget