மேலும் அறிய

காவிரி ஆற்றில் பெருவெள்ளம்... ஒகேனக்கல்லில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்..மூழ்கிய சாலை

ஒகேனக்கல்-தேன்கணிக்கோட்டை சாலை தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள், தங்கும் விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. ஒகேனக்கல்-தேன்கணிக்கோட்டை சாலை மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 


காவிரி ஆற்றில் பெருவெள்ளம்... ஒகேனக்கல்லில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்..மூழ்கிய சாலை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பிள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2.50 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக இருந்தது.

தொடர்ந்து இன்று காலை மேலும் அதிகரித்த நீர்வரத்து, வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, வெள்ளைக் காடாய் காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஒரு வார காலமாக, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 18-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கும், பரில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு, முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தங்கும் விடுகளில் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளித்து வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாகவே நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வந்ததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் தங்கும் விடுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் ஒகேனக்கல்-தேன்கணிக்கோட்டை சாலையில் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.

மேலும் அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் இந்த புறம் இருந்த பேருந்துகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றில் வந்தவர்கள் வனப் பகுதிக்குள் நுழைந்து தேன்கனிக்கோட்டை பகுதிக்கு சென்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வினாடிக்கு மூன்று லட்சம் கன அடி வந்த நிலையில் தற்பொழுது 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 லட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து இன்று நள்ளிரவுக்குள் மேலும் அதிகரித்து 2.50 இலட்சம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களை தங்க வைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் தனியார் மண்டபம் அரசு பள்ளிகளில் முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவிரி கரையோரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget