மேலும் அறிய

Biriyani: இறந்த கோழியை கொண்டு பிரியாணி செய்யப்படுகிறதா? சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

தமிழகத்தில் புற்றீசல்போல அதிகரிக்கும் பிரியாணி கடைகள் அதிகாரிகள் ஆய்வு அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் சமீப காலமாக பிரியாணி கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா?  என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துள்ளனர்.

 தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் தினசரி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு அருந்துகின்றனர். இதில் 20% ஹோட்டல்கள் சைவம், அசைவம் என்று ஒரு சில ஹோட்டல்கள் முழுநேர அசைவ ஹோட்டல்களாகவும் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நகர்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்தான் அசைவ ஓட்டல்களை காண முடியும். சமீப காலமாக தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஸ்கா, கிரில் சிக்கன் சில்லி சிக்கன் என பல வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 இதைத் தவிர முட்டை குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு என விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற கடைகளில் இறைச்சி சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக நாமக்கல், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் அதிகரித்து வருகிறது.

 இந்த கறிக்கோழி பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு பல லட்சம் கோடிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகாவுக்கும் செல்கிறது. கறிக்கோழி பண்ணைகள் அதிகரிப்பு ஒரு பக்கம் அதற்கு ஏற்ப சிக்கன் கடைகள்  சில்லி சிக்கன் கடைகள், பிரியாணி கடைகள் என ஒவ்வொரு நாளும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

 ஆனால் இதன் எதிரொலியாக மக்களுக்கு பல நோய்கள் எளிதில் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் எங்காவது ஓரிடத்தில் நாட்டுக்கோழி கடைகள் இருக்கும். அந்த கடைகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமும் புதன்கிழமைகளில் அரை நாளும் செயல்படும்.

 பொதுமக்கள் நாட்டுக்கோழி வாங்கி வீட்டில் சமைப்பார்கள் சமீப காலமாக சிக்கன் கடைகளில் சில்லி சிக்கன், கடை பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு அடி தூரத்துக்கு ஒரு சிக்கன் கடை உள்ளது. இவ்வாறு சிக்கன் கடைகளின் வருகையால் மக்களுக்கு சீக்கிரம் நோயும் தொற்றிக் கொள்கிறது. கறிக்கோழி விரைவில் பெரியதாக வளர அதற்கு ரசாயன ஊசி செலுத்தப்படுகிறது.

 இதன் காரணமாக குறிப்பிட்ட நாளில் கறிக்கோழிகள் விற்பனைக்கு ரெடி ஆகிறது.  ஆனால் நாட்டுக்கோழி அப்படி இல்லை அவை வளர மாதக்கணக் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டில் மட்டும் தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கில் புதியதாக பிரியாணி கடைகள் முளைத்துள்ளன.

 இது போன்ற கடைகளில் உயிருள்ள கறிக்கோழிகள் தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக உள்ளது. கோழி பண்ணைகளில் இறந்த கோழிகளைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.

 எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல் பிரியாணி கடைகளில் புதிய ஆய்வு செய்ய வேண்டும் எவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Vikram Sugumaran: முதுகில் குத்திய நடிகர், துரோகம் செய்த நண்பர் - இயக்குனர் விக்ரம் சுகுமாரனை ஏமாற்றியது யார்?
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Magnus Carlsen: கார்ல்சனை வெச்சு செய்த குகேஷ் - கடுப்பில் டேபிளை குத்தி ஆவேசம் - மாஸ் காட்டிய தமிழன்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்
மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Embed widget