மேலும் அறிய

Biriyani: இறந்த கோழியை கொண்டு பிரியாணி செய்யப்படுகிறதா? சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

தமிழகத்தில் புற்றீசல்போல அதிகரிக்கும் பிரியாணி கடைகள் அதிகாரிகள் ஆய்வு அவசியம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் சமீப காலமாக பிரியாணி கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா?  என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துள்ளனர்.

 தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் தினசரி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு அருந்துகின்றனர். இதில் 20% ஹோட்டல்கள் சைவம், அசைவம் என்று ஒரு சில ஹோட்டல்கள் முழுநேர அசைவ ஹோட்டல்களாகவும் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நகர்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்தான் அசைவ ஓட்டல்களை காண முடியும். சமீப காலமாக தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஸ்கா, கிரில் சிக்கன் சில்லி சிக்கன் என பல வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 இதைத் தவிர முட்டை குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு என விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற கடைகளில் இறைச்சி சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக நாமக்கல், திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகளும் அதிகரித்து வருகிறது.

 இந்த கறிக்கோழி பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு பல லட்சம் கோடிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகாவுக்கும் செல்கிறது. கறிக்கோழி பண்ணைகள் அதிகரிப்பு ஒரு பக்கம் அதற்கு ஏற்ப சிக்கன் கடைகள்  சில்லி சிக்கன் கடைகள், பிரியாணி கடைகள் என ஒவ்வொரு நாளும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

 ஆனால் இதன் எதிரொலியாக மக்களுக்கு பல நோய்கள் எளிதில் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் எங்காவது ஓரிடத்தில் நாட்டுக்கோழி கடைகள் இருக்கும். அந்த கடைகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமும் புதன்கிழமைகளில் அரை நாளும் செயல்படும்.

 பொதுமக்கள் நாட்டுக்கோழி வாங்கி வீட்டில் சமைப்பார்கள் சமீப காலமாக சிக்கன் கடைகளில் சில்லி சிக்கன், கடை பிரியாணி கடைகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு அடி தூரத்துக்கு ஒரு சிக்கன் கடை உள்ளது. இவ்வாறு சிக்கன் கடைகளின் வருகையால் மக்களுக்கு சீக்கிரம் நோயும் தொற்றிக் கொள்கிறது. கறிக்கோழி விரைவில் பெரியதாக வளர அதற்கு ரசாயன ஊசி செலுத்தப்படுகிறது.

 இதன் காரணமாக குறிப்பிட்ட நாளில் கறிக்கோழிகள் விற்பனைக்கு ரெடி ஆகிறது.  ஆனால் நாட்டுக்கோழி அப்படி இல்லை அவை வளர மாதக்கணக் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டில் மட்டும் தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கில் புதியதாக பிரியாணி கடைகள் முளைத்துள்ளன.

 இது போன்ற கடைகளில் உயிருள்ள கறிக்கோழிகள் தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக உள்ளது. கோழி பண்ணைகளில் இறந்த கோழிகளைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.

 எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல் பிரியாணி கடைகளில் புதிய ஆய்வு செய்ய வேண்டும் எவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Embed widget