மேலும் அறிய

சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு போதிய குடிநீர் திறப்பு ; முதலமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு..!

கோவை மாநகராட்சிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

சிறுவாணி அணையின் நீர், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் கடந்த 1973 ஆண்டு முதல் சிறுவாணி நீர் பகிர்வு குறித்து தமிழக கேரளா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி  மிகாமல் தண்ணீர் வழங்க வேண்டும், மேலும் அணையின் நீர்மட்டத்தை 878.50 மீட்டர் வரை தேக்கி பராமரிக்க வேண்டும். ஆனால் அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 877 ஆக குறைத்துள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பில் 19 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 1.30 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 0.484 டிஎம்சி முதல் 1.12 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது. முழு நீர்தேக்க மட்ட வரையிலான நீர் சேமிப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் பலமுறை கேரள அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தார். 


சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு போதிய குடிநீர் திறப்பு ; முதலமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு..!

அதில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், வழக்கமான அளவு நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். கோவை மாநகராட்சிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சிறுவாணி அணையின் உள்ள வால்வுகள் கூடுதலாக திறக்கப்பட்டது. இதன் மூலம் 6 மணி நேரத்திலேயே சுமார் 12 எம்.எல்.டி நீரானது திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 24 மணி நேரத்திற்கு 20 எம்.எல்.டி மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சிறுவாணி அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தற்போது குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்பது குறித்து கேரள அதிகாரிகளுடன் பேச உள்ளனர். அதனைத்தொடர்ந்து கூடுதல் நீர் திறப்பு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை உடனடியாக திறந்து விட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அப்போது கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்தற்காகவும், இரு மாநில ஒப்பந்தப்படி சிறுவாணி அணையில் இருந்து போதிய நீர் வழங்கியமைக்காவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget