மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சென்னையில் நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... ஒருவர் காயம் - காவல் துறையினர் விசாரணை!
சென்னையில் நடுரோட்டில் நாட்டு வெடி குண்டு வெடித்துச் சிதறிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சென்னையில் நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... ஒருவர் காயம் - காவல் துறையினர் விசாரணை! country bomb blast in Chennai Mankadu one injured சென்னையில் நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... ஒருவர் காயம் - காவல் துறையினர் விசாரணை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/1d77c8420d08239b617bc37ade4f866d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெடிகுண்டு
சென்னை, மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் பையில் வைத்திருந்த பொருள் கீழே விழுந்து, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சத்தம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் யார் என விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்துக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரிடம் விசாரித்தனர். இதில் அந்நபர் ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த வினோத்குமார் (27) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பேப்பர் பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
![சென்னையில் நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... ஒருவர் காயம் - காவல் துறையினர் விசாரணை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/fc1c1f01ab4de1323161300e7bea5978_original.jpg)
மேலும், இவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் யாரையாவது பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டை எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சென்னையில் நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... ஒருவர் காயம் - காவல் துறையினர் விசாரணை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/a247a6bde0c795d71c882cbd944c052e_original.jpg)
இதுகுறித்து காவல் துறையினரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த பொருள் கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion