Breaking News LIVE : பேரவையில் புகழ்ந்து பேசாதீர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

உமா பார்கவி Last Updated: 20 Apr 2023 01:38 PM
Breaking News LIVE : பேரவையில் புகழ்ந்து பேசாதீர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

பேரவையில் என்னை புகழ்ந்து பேசாதீர்கள் என திமுக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Breaking News LIVE : 2 நாட்களுக்கு வெயில் மேலும் அதிகமாக இருக்கும்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking News Live : இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் இபிஎஸ் வெற்றி பெற்றது செல்லும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Breaking News Live : இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச் செயலாளர் தேதலில் இபிஎஸ் வெற்றி பெற்றது செல்லும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதிமுக அலுவலகம் தாக்குதல் விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாதம்

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாக்குவாதம்.

Breaking News LIVE : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

Breaking News LIVE : சூடானில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல்

போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News LIVE : வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழுஉருவ சிலை - முதல்லர் ஸ்டாலின்

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு கம்பீர முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Breaking News LIVE : ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Breaking News LIVE : சென்னை கட்டட விபத்து - உரிமையாளர்கள் 2 பேருக்கு நோட்டீஸ்

சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக உரிமையாளர்கள் 2 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.

Breaking News LIVE : இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,591ஆக உயர்வு

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 12,591ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது.

Breaking News LIVE : இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,591ஆக உயர்வு

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 12,591ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Breaking News LIVE : வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை - இன்று தொடக்கம்

சென்னையில் இன்று முதல் வாகனங்களில் ஆவின் நிறுவன ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

Breaking News LIVE : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.

Breaking News LIVE : அதிமுக தனித்து போட்டி - அண்ணாமலை இன்று ஆலோசனை

சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூடுகிறது. கர்நாடகாவில் ஒரு இடத்தில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறது பாஜக.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.20) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 334வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.



இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.