மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
8 முதல் 10 ஆண்டுகளாக ஏவியேஷன் மற்றும் விமான நிலையத் துறைகளில் களப்பணியாற்றிய நிபுணர்கள் நேரடியாகப் பயிற்சிகளை வழங்குகின்றனர்.

கப்பல் மற்றும் விமான நிலையங்களில் வேலை கிடைக்க நாங்கள் பட்ட சிரமத்தை மற்ற மாணவர்கள் படக்கூடாது என்ற சிறிய நல்ல நோக்கத்திற்காக இதை முன்னெடுத்துள்ளோம்-ஜென்சி அகாடமி ஆனந்த கிருஷ்ணா பேட்டி.
ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளது
மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 வெவ்வேறு பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் சேர்ந்து துவங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையம் ஜென்சி கிட்ஸ்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார். மேலும் இது குறித்து பயிற்சி நிறுவனத்தின் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில்: சென்னையைப் போன்ற மெட்ரோ நகரங்களுக்குச் சென்று படிக்க இயலாத தென் தமிழக மாணவர்களின் வசதிக்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதுவே முதல் முறை
விமான நிலையப் பணிகள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான (Ground Staff) பயிற்சிகள். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் (Anchor) மற்றும் நேர்காணல் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க உள்ளோம். ரேடியோ மற்றும் வீடியோ ஜாக்கி, விளாக்கிங் (Vlogging) போன்ற துறைகளுக்கான பயிற்சிகள். டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக வளர்ச்சி, கேமரா கையாளுதல் மற்றும் ட்ரோன் (Drone) இயக்கும் பயிற்சிகள். AI சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம். இது போன்ற முயற்சி இதுவே முதல் முறை.
மிகக் குறைந்த கட்டணத்திலேயே இப்பயிற்சி
இந்த மையங்களில் வேலை உத்தரவாதமோ (Job Guarantee) அல்லது வேலை அஷ்யூரன்ஸோ வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, நேர்காணல்களை எதிர்கொள்ளத் தேவையான தனித்திறமைகளை (Skills) வளர்க்க மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மெட்ரோ நகரங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10% முதல் 20% வரையிலான மிகக் குறைந்த கட்டணத்திலேயே இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஸ்காலர்ஷிப் (Scholarship)
கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக ஏவியேஷன் மற்றும் விமான நிலையத் துறைகளில் களப்பணியாற்றிய நிபுணர்கள் நேரடியாகப் பயிற்சிகளை வழங்குகின்றனர். நாங்கள் கப்பல் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரிந்துள்ளோம் பணிபுரிந்து வருகிறோம் அந்த இடத்தை அடைய அதற்காக நாங்கள் பட்ட சிரமத்தை தென் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்கள் படக்கூடாது என்ற சிறிய நல்ல நோக்கத்திற்காக இதை முன்னெடுத்துள்ளோம் எந்த ஒரு பலனையும் இலவசமாக கொடுத்தால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களை மிகப்பெரிய துறைகளில் உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கி உள்ளோம். தென் மாவட்ட கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. (உதாரணமாக, ஸ்போக்கன் ஹிந்தி வகுப்புகள் ஆன்லைனிலும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆஃப்லைனிலும் நடத்தப்படுகின்றன). எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் (Scholarship) வழங்குவது குறித்தும் திட்டமிடப்பட்டு வருவதாக அகாடமியின் நிர்வாகிகள்" தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















