மேலும் அறிய

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

Ethirneechal Oct 16: ஜீவானந்தம் மனைவியை கொன்றவர்கள் யார் என்ற உண்மையை அவரிடம் சொல்லிவிடுகிறாள் ஈஸ்வரி. ஜனனி நடத்தப்போகும் தொழிலுக்கு வந்த அடுத்த சிக்கல்...இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் (அக்டோபர் 14) மருமகள்களிடம் இருந்து சமையல் அறை பொறுப்புகள் அனைத்தையும் ஜான்சி ராணியிடம் ஒப்படைக்கிறார் மாமியார் விசாலாட்சி அம்மா.  அதனால் மனம் வருத்தப்பட்ட மருமகள்கள் வீட்டுக்கு வந்த அப்பத்தாவிடம் நியாயம் கேட்கிறார்கள். 

அப்பத்தா  வீட்டுக்கு வந்த முக்கியக் காரணம் அவர் ஒரு பங்க்ஷன் வைத்து இருப்பதாக சொல்லி அதற்கு அவர்களை அழைக்க தான். திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட அதே நாளில் அதே இடத்தில் தான் இந்த பங்க்ஷனையும் அப்பத்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கப்போவது ஜீவானந்தம் என்பதை தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இதைக் கேட்டு கதிர் சந்தோஷப்படுகிறான். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். மரியாதை செய்து அனுப்பி வைக்கலாம்" என நக்கலாக சொல்கிறான் கதிர்.

 

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

அன்று இரவு ஞானம் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கையில் "ஜீவானந்தம் தானாக வந்து வலையில் சிக்கிக் கொண்டான். அவனை இந்த முறை விட்டு விடக்கூடாது.  போட்டுத் தள்ளிவிட வேண்டும்" என சொல்கிறான் கதிர். அந்த நேரத்தில் வக்கீல் போன் செய்து கதிரை போய் வளவனை சென்று சந்திக்க சொல்லி குணசேகரனிடம் இருந்து தகவல் வந்ததாக சொல்கிறார் வக்கீல். ஞானத்துக்கு வளவன் யார் என்று தெரியாததால் குழம்பிப் போய் கதிரிடம் கேட்கிறான். ஆனால் கதிர் எதையோ சொல்லி சமாளித்து விட்டு சென்று விடுகிறான்.  இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஈஸ்வரி கவனித்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து இதைப் பற்றி சொல்வதற்காக செல்ல, ஜனனியும் சக்தியும் பேங்க் விஷயமாக வெளியில் கிளம்புகிறார்கள். ஜான்சி ராணி அவர்கள் கிளம்பும் போதே அபசகுனமாக பேசுகிறாள். 

ஈஸ்வரி ஜீவானந்தத்தை போய் சந்திக்கிறாள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது:

Ethirneechal: மனைவியின் மரணத்தில் இருந்த மர்மம் பற்றி அறிந்த ஜீவானந்தம்.. ட்விஸ்டுடன் இன்றைய எதிர்நீச்சல்!

 ஜனனி மற்றும் சக்தி அவர்கள் வாங்கப் போகும் பேக்டரி உரிமையாளரைப் போய் சந்திக்க செல்கிறார்கள்.  அங்கு ஏதோ தடங்கலாக நடைபெற, அதைப்பற்றி யோசித்துக் கொண்டு கவலையுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது சக்தி  "தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பே இத்தனை சிக்கல்கள் தடங்கல்கள் வருகிறது. இது தேவையா" எனக் கேட்கிறான். அதற்கு ஜனனி "அதற்காக விட்டுட்டு போய்விடலாம் என சொல்றியா" எனக் கோபமாக கேட்கிறாள்.

 



ஜீவானந்தமும் ஈஸ்வரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி "நீங்கள் அங்கு வந்தா தேவையில்லாத பல சிக்கல்கள் வருமோ எனத் தோணுது" என ஜீவானந்ததிடம்  தயங்கி தயங்கி சொல்கிறாள் ஈஸ்வரி.

"உங்க அப்பத்தா கேட்டுக் கொண்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை" என்கிறார் ஜீவானந்தம். "உங்க மனைவி மரணத்துக்கு காரணம் என்னுடைய கணவர் குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் தான்" என சொல்கிறாள் ஈஸ்வரி. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஜீவானந்தம். இதுதான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget