Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!


இந்த வாரத்தில் 4வாரத்தில் வைல்டு கார்டு என்ட்ரி இருப்பதால், யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன், ”பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட் 15 பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முந்தைய போட்டிகளில் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும். போட்டியில் மாறுதல் ஏற்படும். இப்போது வீடே இரண்டாக இருக்கிறது. அதனால் வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் ஆட்டத்தையும் பிரிஞ்சிக்கிட்டு, மக்கள் கருத்தையும் தெரிந்து கொண்டு உள்ளே செல்ல போகிறார்கள்” என கூறியுள்ளார். மேலும் படிக்க


Gautami: பா.ஜ.கவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி! - ஒரு பக்கத்துக்கு விளக்கம்!


பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, நில அபகரிப்பு வழக்கில் அவர் புகாரளித்துள்ள சி.அழகப்பன் என்பவருக்கு பா.ஜ.க. கட்சி ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மகள் மற்றும் தன்னுடைய எதிர்காலத்திற்காக சட்டரீதியிலாக தொடர்ந்து போராடிவரும் கெளதமிக்கு பா.ஜ.க. தரப்பில் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க


Leo Day 4 Collection: உலகில் ரூ.300 கோடி; இந்தியாவில் ரூ.200 கோடி - லியோவுக்கு குவியும் மக்கள்.. 4வது நாள் வசூல் நிலவரம்





படத்திற்கு நிலவிய எதிர்பார்ப்பு காரணமாக முன்பதிவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, முதல் நாளிலேயே படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாயை வசூலாக அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. அதேநேரம், இரண்டாவது நாளில் படத்தின் வசூல் பாதியாக குறைந்தது. 20ம் தேதி வழக்கமான வேலைநாள் என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், சனிக்குழமை அன்று படத்தின் வசூல் மீண்டும் எழுச்சி பெறத்தொடங்கியது. இதனால் மூன்றாவது நாளில் படத்தின் வசூல் சுமார் ரூ.75 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது. மேலும் படிக்க


28 Years Of Kuruthi Punal : 28 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் குருதிப்புனல்: ஸ்பெஷல் தகவல்கள்


1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப் புனல் திரைப்படம் வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல் இல்லாமல் மாறுபட்ட ஒரு முயற்சியாக இருந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட இல்லாதபோது இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததைப் பார்த்து அன்றையத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். சுமார் ரூ 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி மொத்தம் ரூ.20 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தின் வெற்றியை பார்த்து இதே மாதிரியானப் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். மேலும் படிக்க


Prabhas Birthday: ஹீரோ டூ சூப்பர்ஹீரோ... பான் இந்திய நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் இன்று


2002-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஈஸ்வர் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ்.  2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகராக உருவானார். இதனைத் தொடர்ந்து சத்ரபதி, புஜ்ஜிக்காடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட், மிர்ச்சி உள்ளிட்டப் படங்களில் கதாநாயகனாக  நடித்த பிரபாஸ் தனது  நடிகர் பயணத்தில் அனைவராலும் பாராட்டப் படும் ஒரு நடிகராக இருந்துள்ளார். இதுவரை ஹீரோவாக இருந்த அவரது திரைப் பயணம் சூப்பர் ஹீரோவாக மாறியத் தருணம் என்றால் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலமாக. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸை உயர்த்தியதும் பாகுபலி படம்தான். மேலும் படிக்க