மேலும் அறிய

ரணகளமாகும் மதுரை மத்திய தொகுதி.. பிடிஆர் - குஷ்பூ இடையே உச்சக்கட்ட மோதல்!

திமுகவைப் பற்றி நான் சொன்னது சரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்கு நன்றி . அந்த நச்சுத்தன்மையிலிருந்து விலகிச் செல்வது ஒரு தேர்வு மட்டுமல்ல, அது ஒரு அவசியமுமாகும் என குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனுக்கும், பாஜக நிர்வாகி குஷ்பூவுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூடுபிடிக்கும் மதுரை மத்திய தொகுதி

2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் மதுரை மத்தி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சரான பழனிவேல் தியாகராஜனும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சியும் களமிறங்குகின்றனர். இருவரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

பழனிவேல் தியாகராஜன் - சுந்தர்.சி இடையே மோதல்

இந்த நிலையில் மதுரை தொகுதிக்கு நான் நினைத்ததை செய்ய முடியவில்லை என பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்க, அப்புறம் ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என சுந்தர்.சி விமர்சிக்க இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சுந்தர்.சி மதுரை மத்தி தொகுதியின் அடிப்படை வசதிகள் பற்றி அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்க கொதித்தெழுந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில்,  இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. ஆனால் மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.

அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் சினிமா சங்கிக்கு மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்” என சரமாரியாக தனி மனித தாக்குதலை தொடுத்தார். 

குஷ்பூ பதிலடி - பிடிஆர் ஆவேசம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக பிரமுகரும், சுந்தர்.சி மனைவியுமான குஷ்பூ, ”வாதங்கள் சரிந்து விழும்போது எதிரில் இருப்பவர்கள் பதிலளிக்காமல் மாறாக தரம் தாழ்ந்த பேச்சுக்களை கையிலெடுக்கிறார்கள். திமுக தரப்பில் இருந்து வெளிப்படும் இவ்வகை கருத்துகள் தற்செயலானது அல்ல. இது ஒரு கலாச்சாரம். அவமரியாதையை இயல்பாக்கி, மிரட்டல்களையே நம்பி வாழும், பெண்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் குறிவைக்கும் ஒரு கலாச்சாரம்.  அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் உண்மையான மனநிலையையே அம்பலப்படுத்துகிறது. 

திமுகவைப் பற்றி நான் சொன்னது சரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்கு நன்றி . அந்த நச்சுத்தன்மையிலிருந்து விலகிச் செல்வது ஒரு தேர்வு மட்டுமல்ல, அது ஒரு அவசியமுமாகும். நான் இனி ஒரு வார்த்தையைக்கூட வீணாக்கப் போவதில்லை. அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் யார் என்பதை நிரூபிப்பார்கள்” என தெரிவித்தார்.

இதனால் மேலும் கடுப்பான பழனிவேல் தியாகராஜன் குஷ்பூ விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அதில், “தயவுசெய்து பாதிக்கப்பட்டவர் என்ற பாசாங்கு செய்வதை நிறுத்துங்கள். நான் சொன்னதில் அசிங்கம், மற்றும் வெட்கமற்ற தனிப்பட்ட தாக்குதல்கள்  என்பது எங்கு இருக்கிறது? உங்களிடமிருந்தே ஆரம்பிக்கலாம். 1) நீங்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட 3 கட்சிகளுக்கு மாறியுள்ளீர்கள், அதனால் அரசியலில் இருப்பதற்கு உங்களுக்கு எந்தக் கொள்கை அடிப்படையும் இல்லை என்று நான் சொன்னேன்.

உங்கள் கணவரைப் பொறுத்தவரை, அவர் பல நாட்களாக இடைவிடாமல், என் மீது எல்லா விதமான குற்றச்சாட்டுகளையும் மறைமுகப் பேச்சுகளையும் சுமத்தி வருகிறார். அறியாமையைக் குறைப்பது சமூகத்திற்குச் செய்யும் சேவையாகும். அவர் காற்றை விதைத்தான். அவர் சூறாவளியை அறுப்பான். மதுரைக்கு நல்வரவு” என தெரிவித்துள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget